“இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால்…" – வறுமையால் அண்ணன், தங்கை தற்கொலை?

விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுசீந்தரன்(54). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் இவருக்கு, திருமணம் ஆகவில்லை. இவரின் தங்கை பெயர் ரேவதி(50) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிரபல தமிழ் நடிகை ஒருவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் ரேவதி, கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தன் அண்ணன் வீட்டிலேயே வசித்து வந்தாராம். அண்ணன், தங்கை இருவரும் வசித்து வந்த வீட்டில் நேற்று(13.02.2022) … Read more

இன்றைய ராசி பலன் | 14/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

“நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி நடக்கிறது, பாஜக ஹிஜாபோடு நிற்காது…" – மெகபூபா முப்தி

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பிய விவகாரம், இந்திய அளவில் பெரும் சர்ச்சையானது. ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் தொடங்கி இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `ஹிஜாப் விவகாரத்தைத் தேசியப் பிரச்னையாக மாற்ற வேண்டாம்’ எனக் கூறி, இதை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை … Read more

தேனி: பெண் வனக்காப்பாளர் கொலை; சரணடைந்த ஆயுதப்படை காவலர் – நடந்தது என்ன?!

மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பொன்பாண்டி மனைவி ரம்யா (27) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராகப் பணிபுரிந்து வருகிறார். போடியில் வனத்துறை அலுவலகம் அருகே ரமேஷ் என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். ரம்யாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதனால், இவருடைய 2 பெண் குழந்தைகளும் அவரின் பெற்றோர் வீட்டில் உள்ளனர். இந்நிலையில், தனியாக வசித்து வந்த … Read more

சிவகாமியின் சபதம் – ஆயனச் சிற்பி – பகுதி-11 |ஆடியோ வடிவில் கேட்க!

தமிழில் வெளியான புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான கல்கியின் சிவகாமியின் சபதம் ஆனந்த விகடன் பதிப்பக்கத்தில் புத்தகமாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதை ஒவ்வொரு பகுதியாக ஆடியோ வடிவில் Vikatan Audio யூடியூப் தளத்தில் கேட்கலாம். வானளாவி வளர்ந்திருந்த மரங்களின் கிளைகள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் பரவிப் பின்னிக்கொண்டிருந்த வனப் பிரதேசத்தின் மத்தியில் அழகான சிற்ப வீடு ஒன்று காணப்பட்டது. மனோகரமான காலை நேரம், சூரியோதயமாகி ஒரு ஜாமம் இருக்கும். ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் … Read more

`உலகம் சுற்றும் ஃபினிஷர்' 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கிய டிம் டேவிட் யார்?

ஐ.பி.எல் மெகா ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் டிம் டேவிட் எனும் வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பெரிய தொகைக்கு ஏலம் போயிருக்கிறார். அடிப்படை விலையாக 40 லட்சத்தை கொண்டிருந்த டிம் டேவிட் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். பெரும்பாலான அணிகள் இவருக்காக போட்டி போட்டிருந்தன. யார் இந்த டிம் டேவிட்? Tim David 25 வயதான டிம் டேவிட் சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தையின் … Read more

மது போதையில் பள்ளி மாணவிகளை டார்ச்சர் செய்த ஆசிரியர்; போக்சோவில் கைது செய்த போலீஸ்!

பெரம்பலூர் மாவட்டம், நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் மலையப்ப நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்குக் குடித்துவிட்டு வந்ததாகவும், வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த மாணவிகளிடம் அருகில் அமர்ந்து கொண்டு உடையை மாற்றி வரச் சொல்லி யூடியூபில் பாடல்களைப் போட்டு ஆடச்சொல்லியதாகவும் கூறப்படுகிறது. பெரம்பலூர் இதனால் அதிர்ச்சி அடைந்து வகுப்பறையிலிருந்து வெளியேறிய மாணவிகள், இது பற்றிப் பெற்றோர்களிடம் … Read more

28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் மோசடி: பிரபல கப்பல் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு பதிவு!

குஜராத் மற்றும் சூரத்தில் கப்பல் கட்டுமான தளங்களைக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஏ.பி.ஜி. கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மீது சில வங்கிகள் கடன் மோசடி புகார்களை அளித்தன. அந்தப் புகார்கள் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி அளவுக்கு ஏ.பி.ஜி ஷிப்யார்டு மற்றும் அதன் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி மற்றும் அஷ்வினி குமார் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் … Read more

BB Ultimate -14: வெளியேறுகிறார் சுஜா! காரணம் என்ன? வனிதாவை கேள்வி கேட்பாரா கமல்?

அல்டிமேட் சீசனிற்கும் வீட்டின் தலைவர் பதவிக்கும் ராசியில்லை போல. ஏதோவொரு கண்டம் இதில் இருக்கிறது. கடந்த வாரத்தில் வீட்டின் தலைவர் ஆன கையோடு சுரேஷ் எலிமினேட் ஆனார். இப்போது சுஜா அடுத்த வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆம், அதேதான். இந்த வாரத்தில் சுஜாதான் எலிமினேட் ஆகியிருக்கிறார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். வீட்டுப்பணி, டாஸ்க் என்று அனைத்திலும் சின்சியராக செயல்பட்டதாக சக போட்டியாளர்களே சுஜாவைப் பாராட்டியிருக்கிறார்கள். ‘நீதிடா. நேர்மைடா..’ என்று செயல்பட்டவர் சுஜா. அவரை விடவும் சுமாரான போட்டியாளர்கள் … Read more

தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத ஷில்பா ஷெட்டி; நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!

நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திரா கடந்த 2015-ம் ஆண்டு ஆட்டோமொபைல் ஏஜென்சி உரிமையாளர் பர்ஹத் அம்ரா என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனை 2017-ம் ஆண்டு 18 சதவிகித வட்டியுடன் திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது ஷில்பா ஷெட்டியின் தந்தை இறந்துவிட்டார். இதனால் கடன் திரும்ப கொடுக்கப்படாமல் இருக்கிறது. கடன் தொடுத்த தொழிலதிபர் கடனை திரும்ப கொடுக்கும்படி ஷில்பா ஷெட்டி மற்றும் அவர் தாயாரிடம் கேட்டார். ஆனால், அவர்கள் கொடுக்க முன் வரவில்லை. … Read more