நைஜீரியா: கனமழையால் சேதமடைந்த சிறைச்சாலை… 118 கைதிகள் தப்பி ஓட்டம்! – தேடுதல் வேட்டை தீவிரம்
நைஜீரியாவின் தலைநகர் அபுஜாக்கு அருகே உள்ள சுலேஜாவில் புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால், அங்குள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 118 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம், நைஜீரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் அடமு துசா வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவிலும் பல மணி நேரம் கனமழை பெய்தது. நைஜீரியா சிறை இதனால் நைஜர் மாநிலத்தின் சுலேஜா நகரில் உள்ள சிறைச்சாலையின் பாதுகாப்பு … Read more