இந்தியா மட்டுமே உதவி செய்கிறது – சர்வதேச நிதியத்தின் உதவியை கோரும் ரணில் விக்கிரமசிங்கே

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.  இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளதாகவும், இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவாவுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவித்தார்.  … Read more

Video: பாலம் ஒன்று திறப்பு விழாவிலேயே சரிந்த அதிர்ச்சி சம்பவம்

மெக்ஸிகோவில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், மரப்பாலம் ஒன்றின் திறப்பு விழாவின் போது, புத்தம் புதிய பாலம் சரிந்து, அதிலிருந்த பலர் கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மெக்சிகோவின் குர்னவாகா நகரத்தில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் திறக்கப்பட்டது. சம்பவத்தின் போது, ​​மேயர் மற்றும் பலர் உடனிருந்தனர். இயற்கை எழில் கொஞ்சும் ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் மரப் பலகைகளால் ஆனது. பாலத்தின் உலோக சங்கிலிகள் சமீபத்தில் மறுவடிவமைக்கப்பட்டன.  இந்நிலையில், மெக்சிகோவின் இந்த தரைப்பாலம் திறக்கப்பட்ட … Read more

புற்றுநோயை 100% குணப்படுத்தும் அரிய மருந்து – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வரலாற்று சாதனை

மனிதர்களை தாக்கும் நோய்களில் குணப்படுத்தவே முடியாத முக்கிய நோய்களில் ஒன்றாக உள்ளது  புற்றுநோய். ரத்த புற்று, எலும்பு புற்று, நுரையீரல் புற்று, குடல், கல்லீரல் என இதில் பல்வேறு வகைகள் உள்ளன. இவை நமது உடலின் எந்த பகுதியையும் தாக்கும் அபாயம் உள்ளது. புற்றுநோய் பாதிப்பை விட அது மேலும் பரவாமல் இருக்க மெற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மிகவும் வலி மிகுந்தவை. இதற்காக தற்போதுவரை கீமோதெரபி எனும் சிகிச்சை முறை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  புற்றுநோயை குணப்படுத்தும் … Read more

USA vs North Korea: பேச்சுவார்த்தைக்கே வரமாட்டேன் என அடம்பிடிக்கிறது வடகொரியா: அமெரிக்கா

வட கொரியாவுடன் உயர்நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருந்தபோதிலும், அதை வடகொரியா புறக்கணிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் வட கொரியாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை வாஷிங்டன் விரும்புவதாக பலமுறை பகிரங்கமாக கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (ஜூன் 7, செவ்வாய்கிழமை) கூறுகையில், பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிடம் பல முறை முன்வந்தும், வட கொரியா  புறக்கணித்துள்ளது. கோவிட் பரவலில் உதவுவதற்கான அமெரிக்காவின் உதவியையும் தேவையில்லை … Read more

Mystery in Mexico: பிறந்த சில நாட்களிலேயே கண் பார்வை பறிபோகும் மர்மம்

உலகில் சில இடங்களில் நடக்கும் விசித்திரமான  நிகழ்வுகளும் மர்மங்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றன. சில சமயங்களில் அவை விஞ்ஞானிகளுக்கு கூட தீர்க்க முடியாத புரியாத புதிராக உள்ளது. அவ்வகையான மர்மம் நிறைந்த ஒரு இடம் தான் மெக்ஸிகோவில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமத்தில் பிறந்து சில நாட்களிலேயே கண்பார்வை இழக்கும் சம்பவங்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.  இந்தக் கிராமத்தில் குழந்தைகள் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் தான் பிறக்கின்றன. ஆனால், பிறந்து … Read more

UAE அதிபருக்கு ஆடுகளை அனுப்பும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்… காரணம் என்ன

பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், கடனுக்காக பல நாடுகளை அணுகி உதவி கேட்டு வருகிறது. சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு கடன் வழங்க மறுத்தன. இந்த நெருக்கடிக்கு மத்தியில், உதவி பெறவும், அந்த நாடுகளின் மனதை மாற்றவும் பாகிஸ்தான் புதுப்புது வழிகளை கையாண்டு வருகிறது.  பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு கடன் தொல்லையில் இருந்து தன்னை எப்படி மீட்பது எனப் புரியாமல் தவித்து … Read more

சுவாசிக்க விடுங்கள் மூச்சு முட்டுகிறது கடலின் கோரிக்கை: June 8 World Oceans Day

புதுடெல்லி: நாம் வசிக்கும் பூமி நீல கிரகம் என்று அழைக்கப்படுகிறது. அதன் மேற்பரப்பின் பெரும்பகுதி பெருங்கடல்களைக் கொண்டுள்ளது.கடல்கள் ஆக்ரமித்ததைத் தவிர எஞ்சியுள்ள பூமியின் பகுதியில் மனிதர்களான வசிக்கிறோம். நீரின்றி அமையாது உலகு என்பது உண்மையான விஷயம். உலகளாவிய காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் பெருங்கடல்கள் மற்றும் கடல் நீரோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பூமி கிரகத்தை குளிர்ச்சியாகவும் சூடாகவும் வைத்திருக்கின்றன. தாதுக்கள் மற்றும் எண்ணெய் வளம் என பெருங்கடல்கள் வளமானவை. நவீன உலகப் பொருளாதாரத்திற்கு கடல்களின் பங்கு மிகவும் … Read more

வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும்… புதிய கலாச்சாரத்திற்கு கைக்கொடுக்கும் உலக நாடுகள்

70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 3,300 பணியாளர்கள் பங்கேற்புடன், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற உலகின் மிகப்பெரிய சோதனை இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் பல்வேறு துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கிய உலகளாவிய ஆய்வில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இந்த சோதனையோட்டத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்து 3 நாட்கள் விடுமுறை பெறுகிறார்கள். இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் இவர்களுக்கு … Read more

கம்போடியாவில் ரகசிய கடற்படை தளத்தை அமைக்க சீனா திட்டமிடுகிறதா

பசிபிக் பகுதியில் ஆதிக்கம் செய்ய முடியாத நிலையில், கம்போடியாவில் ரகசிய கடற்படை தளத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ராணுவ பலத்தை விரிவுபடுத்தும் ராணுவ தளத்தின் கட்டுமானப் பணிகளை கம்போடியாவில் சீனா துவக்கவிருக்கிறது.  கம்போடியாவில் அமையவிருக்கும் இந்த ராணுவத்தளம் மலாக்கா ஜலசந்தி (Malacca Straits)க்கு அருகில் சீனாவின் ராணுவ செல்வாக்கையும் அதிகரிக்கும். மலாக்கா ஜலசந்தி (Malacca Straits) இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தனது … Read more

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்

அமெரிக்கா: சமீப காலமாக அமெரிக்காவில் கைத்துப்பாக்கி கலாச்சாரத்தால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 15 நாட்களில் துப்பாக்கி சூடு தொடர்பான 3க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு விதிவிலக்கு அளித்ததே கட்டுப்பாடற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  இதனைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க் இந்த திசையில் முதன் முதலாக முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. நியூயார்க்கில் கைத்துப்பாக்கிக்கு புதிய சட்டம் அமெரிக்காவில் அதிகரித்து … Read more