இந்தியா மட்டுமே உதவி செய்கிறது – சர்வதேச நிதியத்தின் உதவியை கோரும் ரணில் விக்கிரமசிங்கே
பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளதாகவும், இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவாவுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவித்தார். … Read more