Elon Musk: 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.54,50,67,53,50,000 இழந்தார் எலோன் மஸ்க்

கடந்த 24 மணி நேரத்தில் எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது என்றாலும், 2022 ம் ஆண்டில் அவர் 70 பில்லியன் டாலரை இழந்தார் என ப்ளூம்பெர்க் குறியீடு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.  புதன்கிழமை, எலோன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு, டெஸ்லாவின் பங்குகளில் சுமார் 5 சதவீதத்துடன் மீண்டும் 200 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றாலும், இந்த ஆண்டு எலோன் மஸ்கின், நிகர சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலருக்கும் … Read more

ஆஃப்கன் குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்தது

ஆஃப்கானிஸ்தானில் நேற்று (2022, மே 25) நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. காபூல் மசூதி மற்றும் மசார்-இ-ஷரீப்பில் மூன்று மினி வேன்களை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.  ஆஃப்கனின் மசார்-இ-ஷெரீப் பகுதியில் மினிவேன் குண்டு வெடிப்புகளில் பலர் காயமடைந்துள்ளனர்.  மினிவேன்களுக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக ஆப்கனின் பல்க் மாகாண தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசிரி தெரிவித்தார். மசார்-இ-ஷரீப் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் அனைவரும் சிறுபான்மை இன ஷிய இஸ்லாமிய இனத்தை … Read more

இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்… கிரிக்கெட் வீரரின் அதிர்ச்சி ட்வீட்

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்த பிறகு, புதிய அரசு அமைக்கப்பட்டது, ஆனால் இதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை எந்த விதத்திலும் மேம்படவில்லை . இப்படியே தொடர்ந்தால் பாகிஸ்தான் இலங்கையை போல் திவால் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸின் ட்வீட், பாகிஸ்தானின் அவல நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் … Read more

Russia Ukraine war update: மரியுபோல் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் 200 சடலங்கள்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரினால், உக்ரைனில் சேதங்கள் அதிகரித்துள்ளன. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய படையெடுப்பு இன்றுவரை தொடரும் நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மரியுபோல் நகரின் மேயரின் ஆலோசகரின் கூற்றுப்படி, உக்ரைனின் மரியுபோல் நகரில், ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதலால் இடிந்து விழுந்த கட்டிடத்திலிருந்து இடிபாடுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இடிபாடுகளுக்குக் கீழ், கட்டிடத்தின் அடித்தளத்தில் சுமார் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் சர்வதேச சமூகத்தினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் … Read more

அமெரிக்காவில் மாணவர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்!

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது புதிதல்ல. ஆனால் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மாணவர்களை குறிவைத்தே நடுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழும் அளவிற்கு கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  அந்த வகையில் கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவின் கொலராடோவின் … Read more

துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எப்போது முடிவு?…ஜோ பைடன் வேதனை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் உயிரிழந்த நிலையில், இந்த துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எப்போது முடிவு கட்டப்போகிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேதனை தெரிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர், குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். … Read more

உப்பு நிறந்த கடலில் சர்க்கரை குவியல்கள்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

உப்பு நிறைந்த கடலில் சர்க்கரை குவியல்கள் உள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா… ஆம்… சமுத்திரத்தில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரை மலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 32 பில்லியன் கோக் கேன்களுக்கு சமமான சர்க்கரை கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் நுண்ணுயிரியலுக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் (Max Planck Institute for Marine Microbiology) என்னும் கல்வி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்குள் சர்க்கரை மலையைக் கண்டுபிடித்துள்ளனர்.  உலகப் பெருங்கடல்களில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரையின் பெரிய மலைகள் … Read more

இலங்கை நிதியமைச்சர் பதவியை கூடுதலாக ஏற்ற ரணில் விக்கிரமங்கே

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.  இலங்கை மற்ற நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதனை சீரமைக்க இலங்கை அரசு வெளிநாட்டு வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. … Read more

அமெரிக்கா: டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 18 குழந்தைகள் உட்பட 20 பேர் கொலை

அமெரிக்காவில் மீண்டும் ஒரு பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க நபர் ஆகும். மேலும் இந்த நபர் … Read more

இலங்கையில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450

அண்மையில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வு, எரிபொருல் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக, தீவிரமடைந்த மக்கள் போராட்ட்டத்தை ஒடுக்கும் வகையில், ஆட்சி ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கினர். அதனை தொடர்ந்து வன்மூறை தீவிரமடைந்து  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்களின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதையடுத்து மஹிந்தா ராஜபக்‌ஷே பதவி விலகி, அங்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றத்தில் ரனில் விக்ரமசிங்க பிரதமரானார்.  ஆனால், அவர் ராஜபக்சே … Read more