விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டாரா எலான் மஸ்க்? அதிர்ச்சி ரிப்போர்ட்

ட்விட்டரை கையகப்படுத்துவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், எலான் மஸ்க் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். வெள்ளியன்று அவரது விண்கல நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு $250,000 கொடுத்ததாக ஒரு ஊடக அறிக்கை வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் அவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக அவர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடராமல் இருக்க, அப்பெண்ணுக்கு இந்த தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பெண், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விமானத்தில் குழு உறுப்பினராக பணிபுரிகிறார். மஸ்க் தன்னை தகாத முறையில் … Read more

திவாலானது இலங்கை: 78 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை மத்திய வங்கி தகவல்

கொழும்பு: பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.  இதனால், மக்களின் கோபம் அரசுக்கு எதிரான போராட்டங்களாக எதிரொலித்த நிலையில், வேறு வழியில்லாமல், பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக … Read more

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ தளவாடங்களை அனுப்பும் அமெரிக்கா

ரஷ்யாவின் போரால் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் உக்ரைன் மக்களுக்கு உதவும் தனது முயற்சிகளை அமெரிக்கா மேலும் தொடர்கிறது. தற்போது, உக்ரைனுக்கு உதவ 100 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்ப உள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு உதவும் விதமாக, 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பவிருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் நிர்வாகம் மேற்கொள்ளவிருக்கும் இந்த உதவி தொடர்பான … Read more

வரம்பை மீறும் பெண்களுக்கு மட்டுமே வீட்டு சிறை: தாலிபான்களின் புதிய ஆணை

பெண்கள் உரிமைகள் குறித்து பேசியுள்ள தாலிபான்கள், தங்கள் ஆட்சியில் வரம்பை மீறும் பெண்கள் மட்டுமே  வீட்டு சிறையில் வைப்போம் எனக் கூறியுள்ளனர் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களை ஒடுக்கும்  வகையில் பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவில் இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கவலைகளை வெளியிட்ட நிலையில், இப்போது பெண் உரிமைக்கு நாங்கள் எதிரி அல்ல என்பது போல் பேசியுள்ளனர். இப்போது புதிய ஆணையை வெளியிட்டுள்ளனர். தாலிபான் தலைவர் … Read more

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை; ரணில் நடத்திய முக்கிய ஆலோசனை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. இதில் ஆட்சிக்கு ஆதரவாளர்களுக்கும் எதிர்பாளர்களுக்கும் இடையே மூண்ட வன்முறையில், இலங்கை பற்றி எரிந்தது. அதில் அந்நாட்டின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிபராக அவரது சகோதரர்  கோட்டாபய ராஜபக்ச தொடருகிறார். பின்னர் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றத்தில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். … Read more

மேற்கத்திய நாடுகள் தடைக்கு பதிலடி; 113 விமானங்களை கைப்பற்றிய ரஷ்யா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக உலகின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் 113 ஜெட் விமானங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக, உக்ரைன் பேரழிவை சந்தித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், இது உலக அளவிலும் பல்வேறு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல், உலகம் பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த தாக்கத்தில் இருந்து மிக பெரிய தனியார் நிறுவனங்கள் கூட தப்பவில்லை. ஏர்கேப் ஹோல்டிங்ஸ … Read more

தீயை நான் பற்ற வைக்கவில்லை… பாகிஸ்தான் மாடல் வெளியிட்ட புதிய வீடியோ

பாகிஸ்தானில் வெப்பம் 100 டிகிரியையும் தாண்டிய நிலையில், கடுமையான வெப்பத்தால் மக்கள் தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கும் சூழல் பாகிஸ்தானில் நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல சமூக வலைதள நட்சத்திரமும், மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar) என்ற மாடல் அழகி, பற்றி எரியும் காடுகளுக்கு முன்னால் போஸ் கொடுத்து வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டார்.  மேலும் அந்த பதிவில் “நான் எங்கிருந்தாலும் நெருப்பு பற்றிக் கொள்ளும்.” என்று … Read more

Monkeypox: டெங்கு வைரஸின் குடும்பத்தை சேர்ந்த குரங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ்

அமெரிக்காவில், ஒருவருக்கு ‘குரங்கு காய்ச்சல்’ உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் மூலமாக அதிகாரப்பூர்வமாக முதல் ‘குரங்கு காய்ச்சல்’ தொற்று அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.  குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் அண்மையில் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. குரங்கு காய்ச்சலைப் பற்றிய சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்: டெங்குவுக்கும் குரங்குக் காய்ச்சலுக்கும் தொடர்பு இருக்கிறது. குரங்குக் காய்ச்சல் நோய், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. இது குரங்குகளிடமிருந்து பரவுகிறது. 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் மாசசூசெட்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது. … Read more

Spain vs Women Rights: ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பை அறிமுகப்படுத்தும் ஸ்பெயின்

வலிமிகுந்த மாதவிடாய் மற்றும் கருக்கலைப்புக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பைக் கொண்டுவர ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது. இதற்கான அந்நாட்டின் முயற்சிகள் சட்டமாக மாறவிருக்கிறது. மாதவிடாய் விடுப்பு மசோதாவுக்கு ஸ்பெயின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. இதன் மூலம் மாதவிடாய்க்காக பெண் ஊழியர்களுக்கு  விடுப்பு வழங்கும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் ஆகும். கருக்கலைப்பு உரிமைகளை வலுப்படுத்தும் சிறுபான்மை இடதுசாரி அரசாங்கத்தின் வரைவு மசோதா சட்டமானால், பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடு என்ற சாதனையை … Read more

ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது!

இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21 பேரை காவல் துறை அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். களுவாஞ்சிகுடி மற்றும் தாண்டியடி  பகுதியில் பணியில் இருந்த காவல் துறை அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் வடக்கு கிழக்கின் பல்வேறு … Read more