ஏலியன்களை கவர நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் நாசா!

பல ஆண்டு காலமாகவே விஞ்ஞானிகள் பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிரினங்கள் எதுவும் வாழ்கின்றதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  ஏலியன்கள் இருப்பதாக அடிக்கடி சில செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றனர், ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.  சில இடங்களில் பறக்கும் தட்டை பார்த்ததாகவும், சில இடத்தில் ஏலியன் வந்து இறங்கியதாகவும் பல செய்திகள் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது.  ஆனால் இவை பற்றிய உண்மையான தகவல்கள் எதுவும் இன்றளவும் உறுதிப்படுத்தப்படவில்லை.  இருப்பினும் விஞ்ஞானிகள் … Read more

கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை…அதிர்ச்சியூட்டும் காணொலி

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதோடு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் ஏராளமானோர் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றித் தவிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.  ஷாங்காயைப் போல பெய்ஜிங் நகரிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங்கிலும் 40க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள், … Read more

ரஷ்யா ஏவுகணை பயங்கரவாத உத்தியை பயன்படுத்துகிறது: உக்ரைன்

https://zeenews.india.com/tamil/topics/Ukraineலிவிவ்: ரஷ்யா உக்ரைன் மீது இரு மாத காலங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மேலை நாடுகள் உக்ரேனிற்கு, ஆயுதங்களை பெருமளவு வழங்கி வருவதாக புகார் கூறிய ரஷ்யா, உக்ரைன் முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள் மற்றும் பிற சப்ளை-லைன் இலக்குகளை குண்டுவீசித் தாக்கியது. ஐரோப்பிய ஒன்றியம் புதன் கிழமை ரஷ்யாவிடம் இருந்து செய்யப்படும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் உள்ள ஐந்து ரயில் நிலையங்களில் உள்ள மின்சார வசதிகளை அழிக்க கடல் … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: தோல்வியில் முடிந்த போப்பின் ராஜீய முயற்சி

ரஷ்யா-உக்ரைன் போர்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த, போப் பிரான்சிஸ் மேற்கொண்ட ராஜீய முயற்சி தோல்வி அடைந்தது. ஈஸ்டர் அன்று போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவருடனான அவரது திட்டமிடப்பட்ட சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. எனவே அவர் மாஸ்கோ … Read more

Sri Lanka Crisis: ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

கொழும்பு: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவையை பதவி நீக்கம் செய்யும் நோக்கில் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.  நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் தள்ளி விட்டதன் மூலம் அரசியலமைப்பு கடமையில் அவர்கள் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குழுவொன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எனக் … Read more

இனி ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூல்; எலோன் மஸ்கின் அதிரடி திட்டம்

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில், அவ்வவ்போது பல அவரது அறிக்கைகள் மற்றும் ட்வீட்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது, இனிவரும் காலங்களில் டுவிட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது என எலோன் மஸ்க் ட்வீட் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். சில பயனர்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சாதாரண பயனர்களுக்கு சமூக ஊடக தளம் முற்றிலும் இலவசம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எலோன் மஸ்க் பதிவு செய்துள்ள ட்வீட்  டெஸ்லா … Read more

ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க விரும்பும் போப் பிரான்சிஸ்

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யாவின் தாக்குதல் 2 மாதங்களைத் தாண்டி தொடர்கிறது. இதனால் இரு தரப்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.  இந்த போரை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி வரும் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.  போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி போப் … Read more

பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை…தாலிபன்களின் புதிய கட்டுப்பாடு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். முன்னதாக 1996-ம் ஆண்டில் இருந்து 2001 வரை தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த காலத்தில் பெண்களின் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டன.  கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வாய்ப்பளிக்கப்படும் என தாலிபன்கள் உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆண்களுடன் ஒரே வகுப்பில் படிக்கக் கூடாது, ஆண் … Read more

அரசின் BMW X5 காரை எடுத்து சென்றதாக குற்றசாட்டு; புதிய சிக்கலில் இம்ரான் கான்

பாகிஸ்தானின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அமைச்சர் மரியம் ஔரங்கசீப் ஒரு பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார். பிரதமர் பதவியை விட்டு செல்லும் போது, இம்ரான் கான் BMW X5  காரை எடுத்துச் சென்றதாகக் கூறுகிறார். BMW  அரசின் அதிகாரபூர்வ வாகனம் என்பதோடு, வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கான பிரதமர் அலுவலகத்தின் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரத்தில் இருக்கும் பிரதமர்  மட்டுமே இந்த வாகனங்களைப் பயன்படுத்த முடியும் என்று ஔரங்கசீப் கூறியதாக டான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த காரை … Read more

புதிய ட்விட்டர் CEO நியமிக்க எலோன் மஸ்க் திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் ஊழியர்கள்

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும்  வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.  ட்விட்டரின் நிர்வாகத்தின் மீது மஸ்க்  தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், எலோன் மஸ்க் ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக … Read more