இந்தியாவை போன்று ஆபத்தான நிலையில் கொழும்பு – மரணங்கள் ஏற்படும் அபாயம்

இந்தியாவின் டெல்லியில் மோசமான காற்று மாசுபாட்டின் விளைவு, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றுடன், இலங்கை தற்போது மிக மோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொழும்பு நகரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 மாவட்டங்கள் காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், நச்சு வாயுக்களை சுவாசிப்பது சில நேரங்களில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், வீட்டை விட்டு வெளியே சென்றால் முகக் கவசங்களை … Read more

ஜனவரி முதல் காகித பயன்பாடற்ற மின் கட்டணப் பட்டியல்

ஜனவரி முதல் காகிதமல்லா மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் செலவுகளைக் குறைப்பது தொடர்பில், உயரதிகாரிகளுடனான இணையவழி மூலமான சந்திப்பின் போது, செலவினங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மின்சாரசபையின் செலவுகளைக் குறைக்க எடுக்கப்படக்கூடிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் கலந்துரையாடினார். இலங்கை மின்சார சபையின் புதிய தலைமையகத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.காகிதமல்லா மின்பட்டியலை அறிமுகப்படுத்தல் தொடர்பிலும், … Read more

புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு நிலையம் அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை  ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 5 ஆம்திகதி உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டிருந்தது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலையில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று … Read more

மக்களே அவதானம்! நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 8.30 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் இன்று நள்ளிரவுப் பொழுதில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வடதமிழ் நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் … Read more

யாருக்கு அரசாங்க உதவி வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு விஜயம் –

யார் யாருக்கு  அரசாங்க உதவி கிடைக்கப் பெற வேண்டும் என வீடு வீடாகச் சென்று அரசாங்க அதிகாரிகளினால் ஆராய்ந்து வருவதாக   நிதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஞ்சித் சியம்பலாபிடிய நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்த  கருத்துக்களுக்கு  விளக்கமளிக்கையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். தற்போது நிவாரண உதவிகளைக் கோரி சமூக நலன்புரி அமைச்சிற்கு 34இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததுடன், அரசாங்கம்   மக்களின் நிலைமைகளை நேரில் … Read more

யாழ்ப்பாணம் ,கல்முனை, புத்தளம் மாவட்டங்களில் “டெங்கு” தீவிரம்

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 1,602 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் (390)  நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில்  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, கடந்த வாரத்தில் கல்முனை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, … Read more

8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடம் அறிமுகப்படுத்தப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு

2023ஆம் ஆண்டு முதல் சாதாரண தரப் பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதோடு, 8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடமாக அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் வேலை வாய்ப்புகளைத் தேடுவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடினமான பணியாக இருக்கும் என்றும், இந்த வளர்ச்சியைத் தயாரிக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு  தரம் 10 இல் பாடத்தை அறிமுகப்படுத்துவதற்கான … Read more

அமைச்சர்களை நியமித்துள்ள கோட்டாபய! மாற்றும் வாய்ப்பு ரணிலுக்கு

 தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையே காணப்படுகிறது. எதிர்காலத்தில் அதில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணினால் அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது  என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,  எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ எமக்கு அதிகாரம் கிடையாது. தேர்தல் ஆணைக்குழுவும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுமே தேர்தல் தொடர்பான தீர்மானங்களை … Read more

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு கோரல் அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் இறுதி வாரத்தில் கோரப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி வேட்புமனுக்கள் கோரப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் ஏற்கனவே அரசாங்கத்தை தவிர எதிர்க்கட்சிகள், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் அதிக அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றன. இதற்காக அண்மையில் எதிர்க்கட்சிகள், தேர்தல்கள் ஆணையாளரையும் சந்தித்து வலியுறுத்தலை விடுத்திருந்தன. உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் 20க்கு … Read more