பேரணியில் வெடித்த பெரும் மோதல்; கலவர பூமியான ஹரியானா! – பிரச்னையின் பின்னணி என்ன?

இரண்டு மாதங்களுக்கு மேலாக மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறைகள் அரங்கேறி வரும் நிலையில், இப்போது ஹரியானா மாநிலத்திலும் புதிதாக கலவரம் வெடித்திருப்பதால் வட இந்தியாவில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ஹரியானாவிலுள்ள குருகிராமை அடுத்திருக்கும் நூஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ என்கிற பெயரில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை குருகிராம் சிவில் லைன்ஸிலிருந்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கி வைத்திருக்கிறார். அந்த அமைப்பினர் பேரணியாக கேத்லா மோட் … Read more

பராமரிப்பு பணிகளை முன்னிட்டு திருப்பதி கோவில் குளத்தில் குளிக்கத் தடை

திருப்பதி பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பதி கோவில் தெப்பக்குளத்தில் குளிக்க ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற இருக்கிறது. அதாவது செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதியிலிருந்து 26- ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து 23-ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாகத் திருப்பதி ஏழுமலையான் கோவில் … Read more

யுரேனியம் அனுப்ப தடை.. நைஜரில் காலை வைத்தால் காலி.. அமெரிக்காவை அலற விட்ட \"ஆப்ரிக்க\" தளபதி! அதிருதே

நைஜர்: நைஜர் நாட்டில் நடைபெறும் ராணுவ புரட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் போர் தொடுப்போம் என அண்டை ஆப்ரிக்க நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பிரான்ஸ், அமெரிக்காவிற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே அதிக தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. இங்கே இருக்கும் ஊழல், அரசியல் காரணமாக பல்வேறு வளங்கள் இருந்தும் ஆப்ரிக்க Source Link

`டெல்லியில் எந்தவொரு சட்டத்தையும் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு முழு உரிமை உண்டு!' – அமித் ஷா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்களின் நீண்ட பட்டியல் அரசிடம் இருக்கிறது. அதில், முக்கியமானதாகக் கருதப்படுவது டெல்லி சிறப்புச் சட்டம். அதாவது, டெல்லி அரசின் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்குச் சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதற்குத் தடை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றியிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கான சட்ட மசோதாவை … Read more

விமான நிறுவனங்கள் புது விமானங்களை இறக்குமதி செய்ய அரசு ஒப்புதல்

டில்லி புதிய விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். தற்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் புதிய விமானங்கள் இறக்குமதி பற்றி கேள்வி  எழுப்பப்பட்டது.  இதற்கு விமான போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாகப்  பதில் அளித்தார் அமைச்சர் தாம் அளித்த பதிலில், ஏர் இந்தியா நிறுவனம் 480 விமானங்களையும், இண்டிகோ நிறுவனம் 500 விமானங்களையும் இறக்குமதி செய்ய டி.ஜி.சி.ஏ. கொள்கை அளவில் … Read more

26 மாதத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளை காப்பாற்ற உதவுங்கள்.. சிறிய உதவி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்

சென்னை: 26 வாரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய சிகிச்சைக்காக நன்கொடையாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அக்குழந்தை உயிர் பிழைத்து இருக்க நீங்களும் உதவலாம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் குமாரி, சதீஷ் தம்பதியினர். எல்லோரையும் போலவே இவர்களும் புதிய உற்சாகத்துடன் திருமண வாழ்க்கையை தொடங்கினர். எல்லாம் நல்லபடியாகதான் போய்க்கொண்டிருந்தது. Source Link

செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பணம் வாங்கிக் கொண்டு அரசு வேலை போட்டுத்தருவதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாகவும், சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாகவும் வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில், அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை, கடந்த ஜூன் 13ஆம் தேதி கைது செய்தது.. இதையடுத்து அவர் நெஞ்சு … Read more

\"லிமிட்\"டை மீறிய தாலிபன்கள்.. அனலில் தகிக்கும் ஆப்கன் பெண்கள்.. அடுத்த குண்டை தூக்கி போட்ட தாலிபன்ஸ்

காபூல்: பெண் குழந்தைகளும், பெண்களும், தாலிபான்கள் விதிக்கப்படும் விதிமுறைகளால் திணறிப்போயுள்ளனர். இப்போது இன்னொரு கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வருகிறார்கள்.. பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண் குழந்தைகள், ஸ்கூலுக்கு போகாமல் இருக்கிறார்கள். அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ள Source Link