ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்…!

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 8.01 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 92 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதங்கள், உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐடி நிறுவனங்களின் முடிவால் ஐடி ஊழியர்கள் அச்சம்.. விரைவில் பணிநீக்கம் வருமா..?!

இந்திய ஐடி துறை கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, இந்த அதிகப்படியான வளர்ச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்து வரும் அதிகப்படியான திட்டங்கள் மட்டுமே காரணமாக உள்ளது. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான திட்டங்கள் கிடைத்து வரும் காரணத்தால் போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான டிமாண்டு அதிகரித்த வேளையில் சக போட்டி நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை ஈர்க்க துவங்கியது இதனால் ஐடி நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதம் உச்சத்தைத் … Read more

மைனஸ் 15 டிகிரி குளிரில் மக்கள்; ரகசிய ஹீட்டர் மேல் நின்று குடும்பப் பெருமை பாடிய கிம் ஜாங் உன்!

மறைந்த முன்னாள் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் இல்-ன் 80-வது பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை, சாம்ஜியோன் நகரில் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்களை உறையவைக்கும் கடும் குளிரில் நிற்கவைத்து அவருடைய தந்தையின் புகழ் பற்றிப் பேசியிருக்கிறார். கிம் தனது குடும்பத்தைப் பற்றி சுமார் 30 நிமிடங்கள் வரை அந்த நிகழ்ச்சியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குளிர் `மைனஸ் 15 டிகிரி செல்சியஸ்’ என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி … Read more

சென்னையில் பதற்றமான 1,198 வாக்கு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…

சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி அடையாளம் காணப்பட்டுள்ள  பதற்றமான 1,198 வாக்கு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  சென்னையில் மட்டும், கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாநகர போலீசார், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல்படையினர் என மாநகரம் முழுவதும் கூடுதலாக மொத்தம் 18 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்களுக்கும் … Read more

5 நதிகளை இணைக்க டெல்லியில் இன்று ஆலோசனை: கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் தமிழகத்துக்கு பெரிய வரப்பிரசாதம்

சென்னை: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தண்ணீர் பற்றாக் குறையை தீர்க்கும் வகையில் நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி நதிகளை இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக … Read more

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21-ம் தேதி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார். பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

தானே- திவா இடையே புதிதாக 2 ரெயில் பாதைகள் – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

மும்பை, மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கல்யாண் முக்கியமான சந்திப்பு ரெயில் நிலையமாக உள்ளது. இதில் கல்யாண் – சி.எஸ்.எம்.டி. இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதையில் ஸ்லோ மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற 2 பாதையில் விரைவு மின்சார ரெயில்களுடன், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.  பெரும்பாலான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில், நீண்ட தூர ரெயில்களால் மின்சார ரெயில்களை தாமதமாக இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இதை தடுக்கும் வகையில் தானே – … Read more

சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. இன்று சற்றே ஆறுதல்.. ஆபரண தங்கம் நிலவரம் என்ன?

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம். இதற்கிடையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தங்கத்திற்கான தேவையானது, இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சர்வதேச நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், 5ல் 2 பங்கு தங்கத்தின் தேவையானது பாதுகாப்பு ரீதியாக முதலீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா+நேட்டோ போட்ட மிகப்பெரிய வெடி.. தங்கம் விலை மீண்டும் உச்சம்..! முதலீடுகள் வெளியேறலாம் … Read more

விவசாயிகள் கோரிக்கையை ஏற்ற கர்நாடக அரசு; கன்னட மொழியில் சோலார் ஒப்பந்த நகல்!

இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான பாவகடாவின் ஒப்பந்த நகல் ஆங்கிலத்திலிருந்து கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் குறித்த புரிதலை இது விவசாயிகளுக்கு வழங்கும். மேலும் விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒப்பந்தத் தொகையை உயர்த்துவது குறித்தும் கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக சூரிய எரிசக்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2016-ம் ஆண்டில் கர்நாடக அரசானது, சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டது. அதற்காகப் பாவகடா பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள விவசாயிகளின் நிலங்களைக் குத்தகைக்கு எடுக்கவிருப்பதாகக் … Read more

மாணவி ஹேமமாலினி மர்ம மரணம்! அதிர்வலையை கிளப்பிய சம்பவத்தில் சாமியார் கைது… வெளிவரும் பகீர் பின்னணி

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவி ஹேமமாலினி மர்ம மரணம் தொடர்பாக சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள கோவில் அருகே தங்கி அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி ( 20) தனியார் பொறியியல் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து … Read more