தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை:     தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 3,086 ஆக பதிவாகி இருந்தது.   இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 2,812 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 33 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது. … Read more

ஹோண்டா, யமஹா, சுஸுகி-ஐ ஓடஓட விரட்டிய ராகுல் பஜாஜ்..!

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன நிறுவனத்தை உருவாக்கிய ராகுல் பஜாஜ் 83 வயதான நிலையில், அவருக்கு நிமோனியா மற்றும் இதயப் கோளாறு வாயிலாக ஏற்பட்ட உடல்நல குறைவால் சனிக்கிழமை (இன்று) பிற்பகல் 2.30 மணியளவில் மறைந்தார். கல்லூரி படிப்பை முடித்த கையோடு நிர்வாகப் பொறுப்பில் உட்கார்ந்த பல சவால்களைச் சமாளித்த பஜாஜ் என்னும் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார். ராகுல் பஜாஜ் ராகுல் பஜாஜ் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்ற கையோடு, … Read more

சென்னை: மாமியாரிடம் தங்கச் செயினை திருடிய மருமகள்! – ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?!

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா. வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே இருந்துவரும் லலிதா, கடந்த 10-ம் தேதி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். அவர், லலிதா அணிந்திருந்த 3 சவரன் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். சிசிடிவி கேமரா அதனால் அதிர்ச்சியடைந்த லலிதா வீட்டில் உள்ளவர்களிடம் விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக ஆவடி போலீஸ் நிலையத்தில் … Read more

நாளை பிறக்கவுள்ள புது மாதம்! யாருக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகுது? நாளைய ராசிப்பலன்

 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அதிகாலை 3.12 மணிக்கு சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான மாசி பிறக்கிறது. இப்படி சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்வதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள். நாளை நடக்கவுள்ள இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு கோடிஸ்வரயோகத்தை பெறப்போகின்றது என்று பார்ப்போம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp … Read more

12/02/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,812 பேருக்கு கொரோனா பாதிப்பு, 17 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சிகிச்சை பலனின்றி  17 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 546பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.45 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,05,822 மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 6,31,92,873 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 2,812 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு  34,33,966 … Read more

முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கு.க.செல்வம். தி.மு.க.வை சேர்ந்த இவர் 2020, ஆகஸ்டு 4-ம் தேதி டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினார். தகவலறிந்த தி.மு.க. அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இருந்தாலும் சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கு.க.செல்வம் தியாகராயநகரில் உள்ள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயம் வந்து பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு … Read more

மயிலாடுதுறை நகராட்சியில் 19- வது வார்டு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

சென்னை: மயிலாடுதுறை நகராட்சியில் 19- வது வார்டு உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி உயிரிழந்ததை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!

அமெரிக்காவில் பணவீக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இதைச் சமாளிக்க அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் திட்டமிட்ட மார்ச் மாத வட்டி வகித உயர்வை அவசர கால அடிப்படையில் வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாகத் தங்கம் மீதான டிமாண்ட் சற்று அதிகரித்துள்ள காரணத்தால் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை என்ன..? அடுத்த 5 வருஷத்துக்கு நான்தான் ராஜா.. அசைக்க முடியாத சந்திரசேகரன்..! எம்சிஎக்ஸ் … Read more

நகைக்கடன் தள்ளுபடி: `விடுபட்டவர்களும் ஆதாரத்தைக் காட்டி பயன்பெறலாம்!' – அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள டிடி.595 காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில், கூட்டுறவுத்துறை மூலம் நகைக்கடன் தள்ளுபடி செய்தவர்களுக்கு சான்றிதழ்களுடன் நகைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் 5 பவுனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்தார். அதன்படி … Read more

திருமண வரவேற்பில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண்! அடுத்து நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவம்

இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கிய பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சீனிவாசப்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சைத்ரா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது மேடையில் மணக்கோலத்தில் இருந்த சைத்ரா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு … Read more