26ஆம் தேதி புத்தகப்பை இல்லா தினம் ரத்து! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 26ந்தேதி  புத்தகப் பைகள் இல்லாத தினம் கடைபிடிக்கப்படும் என நேற்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், இன்று அந்த அறிவிப்பை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பள்ளி, கல்லூரிகளும் முழுமையாக நடைபெற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி,  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை … Read more

ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரிக்கு விராட்கோலி கையெழுத்திட்ட பேட் – மத்திய மந்திரி ஜெய்சங்கர் வழங்கினார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவின் பின்னர் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு  சென்று அதனை பார்வையிட்டார்.  அவருடன் ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரிஸ் பெய்னும் சென்றிருந்தார். அப்போது விராட்கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை  ஜெய்சங்கர் மரிஸ் பெய்னுக்கு பரிசாக வழங்கினார் பின்னர் இது குறித்து தமது ட்விட்டர் பதிவில் நியாயமான … Read more

ஒரு வருஷத்துக்கு பால், போன் ரீசார்ஜ் இலவசம்: பழநியை திணறடிக்கும் சுயேச்சைகள்

பழநி: அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் மிரள வைப்பதாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகராட்சி மற்றும் பேரூராட்சி  வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் இடங்களில் தங்களை ஜெயிக்க வைத்தால் ஒரு வருடத்திற்கு வீட்டுக்கு பால் இலவசமாக விநியோகம். செல்போன் ரீசார்ஜ் செய்து தருவேன் என்று வாக்குறுதிகளை வாரி வீசி வாக்கு வேட்டையாடி வருகின்றனர். இதுபோன்ற கவர்ச்சிகரமான … Read more

இலங்கை தமிழர் நலனுக்கு இந்தியா தொடர்ந்து பாடுபடுகிறது| Dinamalar

புதுடில்லி:”இலங்கை தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகளை தீர்க்குமாறு அந்நாட்டு அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது,” என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.நேற்று லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது முரளிதரன் பேசியதாவது:இலங்கை தமிழர் நலனுக்கு இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அங்கு தமிழர் உட்பட அனைத்து சமூக மக்களுக்கும் அமைதி, சமத்துவம், நீதி, கண்ணியமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என, பல கட்டங்களில் இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. இதை, ஐ.நா.,மனித … Read more

மராட்டியத்தில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

மும்பை, மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி, மராட்டியத்தில் இன்று 5 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 6 ஆயிரத்து 248-ஐ விட குறைவாகும்.  இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 35 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 14 ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் … Read more

பிட்காயின் தடையா..? நிர்மலா சீதாராமன் நறுக் பதில்.. அப்போ 30% வரி..?!

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை இந்திய பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையையும், வரி விதிப்பு மூலம் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கப்பட்டுக் கணக்கிட முடியும் என நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இன்று பட்ஜெட் தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராஜ்யசபாவில் பதில் அளித்தார். அப்படி நிர்மலா சீதாராமன் கொடுத்த 10 முக்கியமான பதில்கள் மற்றும் விளக்கத்தை இப்போது பார்ப்போம். Budget 2022: நிர்மலா சீதாராமனுக்கு 3 முக்கிய … Read more

இன்றைய ராசி பலன் | 12/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்து 6 பேர்களுக்கு நேர்ந்த துயரம்: உறவினரின் கொடுஞ்செயல்

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்கள் உறவினர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலடெல்பியா நகரில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணிக்கு குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் தொடர்புடைய 29 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் உறவினரின் வீட்டின் படுக்கையறைக்குள் நுழைந்து இரண்டு வெவ்வேறு சமையலறை கத்திகளால் தூக்கத்தில் இருந்த 6 பேரை குத்தியதாக … Read more

இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதின்றம் பாராட்டு

சென்னை: கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய ரூ. 2,390 கோடி வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஆண்டு வாடகை ரூ. … Read more

ஏழை நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது: நாட்டிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக டயாலிசிஸ் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் தொடங்கப்பட்டது.   மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 569 மாவட்டங்களில் ஹீமோடையாலிசிஸ் இயந்திரங்களின் மூலம் பிரதமரின் … Read more