யானை துரத்தியதால் உயிருக்கு அஞ்சி 2 மணி நேரமாக மரத்தின் மீது பரிதவித்த வனத்துறையினர்!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே காட்டு யானை துரத்தியதால் உயிருக்கு அஞ்சி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மரத்தின் மீது பரிதவித்த வனத்துறையினர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஆராளம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வந்ததால் யானைகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்க பொதுமக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத் துறையினரின் கண்ணுக்கு காட்டு யானை ஒன்று தெரிய … Read more

தெலங்கானா | இ- பைக் ஷோரும் தீ விபத்தில் 8 பேர் பலி; மேலே இருந்த ஹோட்டலுக்கு தீ பரவியதால் விபரீதம்

செகந்திராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இ பைக் ஷோரும் ஒன்றில் திங்கள் கிழமை இரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் நான்கு தளம் கொண்ட கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரும் ஒன்றில் திங்கள் கிழமை இரவு 10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களுக்கும் தீ வேகமாக பரவியது. இந்த … Read more

செகந்திராபாத் தீ விபத்து -8 பேர் பலி: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர். செகந்திராபாத் நகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையம் உள்ளது. அங்குள்ள வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதியில் நேற்றிரவு திடீரென தீ பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதிக்கு பரவியது. அங்கு 40 பேர் தங்கியிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து … Read more

மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமில் நள்ளிரவு தீ விபத்து… 7 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்தவர்களில் 7 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். செகந்திராபாத்தில் ரூபி எலக்ட்ரிக்கல் என்ற மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமும், அந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் லாட்ஜும் இயங்கி வந்தது. நள்ளிரவு மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் எழுந்த கரும்புகையால், லாட்ஜில் தங்கியிருந்தவர்களில் ஒரு பெண் உள்பட 7 பேர் மூச்சுத் … Read more

ஓபிஎஸ் தரப்புக்கு மீண்டும் ஒரு பின்னடைவு

டெல்லி: அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எடுத்து ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல் முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவு அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தெளிவு படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து உயர்நீதிமன்றம் உத்தரவின் படி அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்பாடைக்கப்பட்டது. … Read more

தெலங்கானா: எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சென்னையை சேர்ந்தவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த செகந்திராபாத் பகுதியில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூம் ஒன்றில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ கட்டடத்தின் மேலே உள்ள தங்கும் விடுதியில் மளமளவென பரவியதால் முதல் மாடி முழுவதும் புகை மண்டலமானது. இதில், சிக்கி தீயில் கருகியும், மூச்சு திணறல் ஏற்பட்டும் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உடனடியாக … Read more

ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் இலவச உணவு

புதுடெல்லி: அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்திய ரயில்வே பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது. எனினும், இயற்கை மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதில் எந்தக் காரணத்துக்காகவும் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் … Read more

உணவு பொருள்களின் பணவீக்கம் 7.62% உயர்வு: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!!

சென்னை: உணவு பொருள்களின் பணவீக்கம் 7.62 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை அதிகமாக இருப்பதே சில்லறை பணவீக்கம் உயர்ந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. பணவீக்கம் 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்பதே … Read more

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதால் சிறை – மறைந்த துவாரகா பீடாதிபதி சுவாமி ஸ்வரூபானந்தா யார்?

புதுடெல்லி: அத்வைத ஆச்சார்யரான ஆதி சங்கரர் தோற்றுவித்த துவாரகா பீடத்தின் அதிபதியாக இருந்து வந்தவர் ஜகத்குரு ஸ்வரூபானந்த சரஸ்வதி. மத்திய பிரதேசத்தின் நர்சிங்பூரில் உள்ள ஜோதீஸ்வர் ஆசிரமத்தில் தங்கியிருந்த அவருக்கு நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் மாலை 3.30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. மத்தியபிரதேசத்தில் உள்ள சியோனி மாவட்டத்தின் டிகோரி கிராமத்தில் 1924-ம் ஆண்டு பிறந்த இவர், பத்ரிநாத்தில் உள்ள ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாராக இருந்த பிரம்மானந்த சரஸ்வதியின் சீடராக இருந்தார். குஜராத்தில் … Read more

செகந்திராபாத் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி

செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.