கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல்

உத்தரகாண்ட்: கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அருணாச்சல் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் அவர்களது சொந்த ஊர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தின் கமங் பகுதியில் உள்ள உயரமான மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அங்கு கடந்த 6-ம் தேதி ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவம் 7 வீரர்களை சடலமாக மீட்டது. மீட்கப்பட்ட ராணுவ வீரர்களின் உடல் அசாமின் … Read more

கச்சா பாமாயிலின் இறக்குமதி வரி குறைப்பு – மத்திய மறைமுக வரிகள் வாரியம் <!– கச்சா பாமாயிலின் இறக்குமதி வரி குறைப்பு – மத்திய மறைமுக வ… –>

கச்சா பாமாயிலின் இறக்குமதி வரியை 8 புள்ளி 25 சதவிகிதத்தில் இருந்து 5 புள்ளி 5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இந்த வரி குறைப்பு நாட்டில் பாமாயில் விலையினை கட்டுப்படுத்தும் என்றும் உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரியையும் மத்திய அரசு 7 புள்ளி 5 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்துள்ளது. இந்த வரிக் … Read more

ஒயின் விற்பனைக்கு எதிரான உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.  இதற்கு வருடத்திற்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் … Read more

கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறைவு: இந்தியாவில் தினசரி பாதிப்பு 50,000-க்கும் கீழ் குறைந்தது

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 44,877 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,26,31,421ஆக உயர்ந்தது.* புதிதாக 684 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more

அடுத்த வாரத்தில் இந்தியா வருகிறது கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள்

பிரான்சில் இருந்து கடைசி 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளன. பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016ஆம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. அதன்படி, 2020ல் முதலாவதாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு பல குழுக்களாக இதுவரை மொத்தம் 33 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 3 போர் விமானங்கள் … Read more

'குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.. ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமர் ஆவார்' – ஒவைசி

ஹைதராபாத்: ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணிந்து முஸ்லிம் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, ஒவைசி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் பேசிய வீடியோ அடங்கிய ட்வீட் ஒன்றை பதிவிட்ட ஒவைசி, அதில், “ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்கு செல்வார்கள். மாவட்ட கலெக்டர்களாக, நீதிபதிகளாக, டாக்டர்களாக, தொழிலதிபர்களாக மாறுவார்கள். அதனை பார்க்க நான் உயிருடன் … Read more

பிப். 19 வரை 144 தடை உத்தரவு – மாநில அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் நாளை காலை முதல் வரும் 19 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பல மாவட்டங்களின் பள்ளி – கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட நிலையில் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹிஜாப் விவகாரம் தற்போது … Read more

சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடும்.. 20 நிமிடத்தில் சாதாரண சைக்கிளை மின்சார சைக்கிளாக மாற்றும் புதியவகை சாதனம்! ஆனந்த் மகேந்திரா பாராட்டு! <!– சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடும்.. 20 நிமிடத்தில் சா… –>

சாதாரண சைக்கிளை மின்சார வாகனமாக மாற்றும் வகையிலான பேட்டரி சாதனத்தை கண்டுபிடித்த நபருக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்ய ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நபர் ஒருவர் தாம் கண்டுபிடித்த கருவியின் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறார். மணிக்கு 26 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த பேட்டரி சைக்கிள் கரடுமுரடான பாதையிலும் சென்றும் வருவதோடு, சேற்றில் சிக்கினாலும் … Read more

70 சதவீத சிறுவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது – மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.   முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தும் பணி நடந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும்  ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி … Read more