பருவமழையை எதிர்கொள்ள 60 காவலர்களுக்கு பயிற்சி: வேலூர் அகழியில் செயல்விளக்கம்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள 60 காவலர்களுக்கு வேலூர் கோட்டை அகழியில் தமிழ்நாடு கமாண்டோ போலீசார் இன்று பயிற்சி அளித்தனர். தமிழகத்தில் விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றனர். மக்களை பாதுகாப்பதே முதற்பணியாக கொண்டு செயல்பட வேண்டும் எனவும், கனமழை ஏற்படும்பட்சத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறை … Read more