#BREAKING : ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது.!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரையும், 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் 2 விசைப் படகுகளையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளது. அதனை தொடர்ந்து இவர்கள் விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில்தான் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதி … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது <!– சாலையில் சென்று கொண்டிருந்த முதியவரிடம் கத்தியைக் காட்டி … –>

சென்னையில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 8 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். படப்பை பகுதியில் நேற்றிரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த ஏரிக்கரையை சேர்ந்த மகேந்திரன் என்பவரை வழிமறித்த 6 இளைஞர்கள், கழுத்தில் கத்தியை வைத்து அவரை கொலை செய்யப்போவதாக மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், … Read more

செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ குறிப்பிட்ட செயலிகளின் மூலம் கடன் வாங்க வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சலோன் ஆஃப் செயலிகள் மூலம்மக்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பின்னர் தொந்தரவு செய்த மோசடிக் கும்பலை சென்னை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், கடன் செயலிகளைக் கண்டறிந்து, … Read more

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி: தமிழக அரசு முக்கிய சுற்றறிக்கை

Tamilnadu govt order jewel loan waiver on rural area: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்றும்,  நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தது. தேர்தலில் … Read more

#சற்றுமுன் || பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரரை ரூ.10 கோடிக்கு தட்டி தூக்கிய லக்னோ அணி.!

பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரர்கள்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் தற்போதுவரை ஏலம் போன வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.  சற்றுமுன் : அவிஷ் கானை 10 கோடிக்கு லக்னோ அணி எனலாம் எடுத்துள்ளது. முருகன் அஸ்வின் 1.6 கோடி ரூபாய்க்கும், பசில் தாம்பியை 30 லட்சத்துக்கும் முன்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. கே,எம் ஆசிப்.,யை 20 லட்சத்துக்கும், துஷார் தேஷ்பாண்டே-வை 20 லட்சத்துக்கும் … Read more

நாமக்கல்லில் 3 மளிகை கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து திருட்டு.! <!– நாமக்கல்லில் 3 மளிகை கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து… –>

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள 3 மளிகை கடைகளில் கடந்த 2 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள், கடைகளின் பூட்டை உடைத்து பொருட்களைத் திருடி செல்லும் காட்சிகள், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. Source link

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடக்கும் விதம்: சரத்குமார் கடும் அதிருப்தி

சென்னை: ’முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று துவங்கியிருக்கும் நிலையில், தேர்வர்களுக்கு தொலைதூரங்களில் தேர்வு மையம் ஒதுக்கியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது’ என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக அறிவிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று துவங்கியிருக்கும் நிலையில், தேர்வர்களுக்கு தொலைதூரங்களில் தேர்வுமையம் ஒதுக்கியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தேர்வர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொள்ளாமல், தென்காசி மாவட்ட தேர்வர்களுக்கு … Read more

திடீர் திருமணம் செய்து கொண்ட சன் டிவி நடிகை; பிரபலங்கள் வாழ்த்து

Sun TV actress Shambhavi got married viral video: சன் டிவி சீரியல் நடிகையான சாம்பவி திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அவரின் திருமண வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சஞ்சீவ் நடிப்பில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த சீரியல் கண்மணி. இந்த சீரியல் கொரோனா ஊரடங்கால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சீரியலில் முத்துச்செல்வி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் சாம்பவி குருமூர்த்தி. இவர் தற்போது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் கயல் … Read more