குழந்தைகளுக்கு 'துப்பாக்கி, வெடிகுண்டு' என பெயர் வையுங்க! – பெற்றோருக்கு அரசு ஆர்டர்

குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள், துப்பாக்கி உள்ளிட்ட பெயர்களை சூட்டும்படி பெற்றோருக்கு வட கொரியா உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, தனது நாட்டு மக்களுக்கு தேசப் பற்றை வளர்க்கும் என்ற அடிப்படையிலான உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. இது பற்றி தி மிரர் பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் மற்றும் விசுவாசம், துப்பாக்கி போன்ற பெயர்களை சூட்ட வேண்டும் என வட கொரிய … Read more

தென்கொரிய எல்லை அருகே 130 முறை பீரங்கி குண்டு வீசிய வடகொரியா – மீண்டும் பதற்றம்

சியோல், அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. குறிப்பாக, தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா இன்று பீரங்கி குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லையின் சர்ச்சைக்குரிய … Read more

இந்தோனேசியாவில் வெடித்துச்சிதறிய எரிமலை: 2 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய எரிமலையான செமேரு உள்ளது. சுமார் 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட செமேரு எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது. கன மழை காரணமாக செமேரு எரிமலையின் குவி மாடம் சரிந்தது. இதனால் எரிமலையில் நெருப்பு குழும்பு வெளியேற தொடங்கியது. எரிமலையில் இருந்து சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது. 5 ஆயிரம் அடி உயரத்துக்கு சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது. … Read more

வூஹான் ஆய்வக விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வூஹான்: கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்ததாகவும், அந்த ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர், அங்கிருந்து படிப்படியாக உலக நாடுகளுக்கு பரவியதுடன், கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. பல லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். இந்த வைரஸ், சீனாவில் உள்ள ஆய்வகத்தில் செயற்கை … Read more

பத்ம பூஷன் விருது பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் வயது முதிர்வால் காலமானார்!

பாரிஸ், புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர்( 91) வயது முதிர்வால் நேற்று காலமானார். டொமினிக் லேபியர் அமெரிக்க எழுத்தாளர் லாரி காலின்ஸுடன் இணைந்து ஆறு புத்தகங்களை எழுதினார். லேபியர்-காலின்ஸுடன் இணைந்து இயற்றிய ஆறு புத்தகங்கள் 50 மில்லியன் பிரதிகள தாண்டி விற்பனையாகியுள்ளன. அவர்கள் இயற்றிய “இஸ் பாரிஸ் பர்னிங்?” புத்தகம் உலகப்புகழ் பெற்றது. கொல்கத்தாவில் ஒரு ரிக்சாக்காரர் வாழ்க்கையில் படும் கஷ்டங்களைப் பற்றி எழுத்தாளர் டொமினிக் லேபியர் எழுதி, 1985இல் வெளியான ‘சிட்டி ஆப் ஜாய்’ … Read more

ரஷியாவின் காஸ்பியன் கடற்கரையில் 2,500 சீல்கள் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு!

மாஸ்கோ, தெற்கு ரஷியாவின் காஸ்பியன் கடற்கரையில் கிட்டத்தட்ட 2,500 சீல்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின. இத்தனை சீல்கள் உயிரிக்க காரணம் தெரியவில்லை எனவும், ஒருவேளை அவை இயற்கையாக இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் 700 சீல்கள் இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இந்த எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்தது. காஸ்பியன் சுற்றுச்சூழல் மைய தலைவர் ஜார் காபிசோவ் கூறுகையில், இவை ஒரு வரத்திற்கு முன் இறந்திருக்கலாம், அவை வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதற்கான எந்த … Read more

மனஉளைச்சலால் நீதிமன்றத்தை நாடிய நபர்| Dinamalar

டப்ளின்: அயர்லாந்தில் வேலையே கொடுக்காமல் ‘சும்மா’ வந்துசெல்ல ஆண்டுக்கு ரூ.1.03 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும் இதனால் தனக்கு மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை புலம்புவதையே பலரும் வாடிக்கையாக வைத்திருப்பர். எவ்வளவு வேலை செய்தாலும், சம்பளம் விஷயத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை திருப்திப்படுத்துவதில்லை. இது இப்படியிருக்க அயர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கு எந்த வேலையையும் செய்ய விடாமல் ‘சும்மாவே’ இருக்க வைத்து சம்பளம் கொடுத்திருக்கிறது அவர் பணியாற்றிய ரயில்வே … Read more

ஊபரில் சென்று வங்கியை கொள்ளை அடித்த திருடன் – சிங்கம் சூர்யாவாக மாறிய போலீஸ்!

அமெரிக்காவின் அயோவாவின் டெஸ் மொயின்ஸ் நகரில் உள்ள வங்கியைக் கொள்ளையடித்த புளோரிடாவைச் சேர்ந்த நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார், பின்னர் அவரை தனது இல ஓட்டிச் சென்ற உபெர் டிரைவரை கார்ஜாக் செய்தார். புளோரிடாவைச் சேர்ந்த 22 வயதான ஜேவியர் ரஃபேல் என்பவர் கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில், மினசோட்டாவின் லேக் கவுண்டியில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் அமெரிக்க-கனடா எல்லையில் இருந்து இரண்டு மணி நேரம் தொலைவில் இருந்தபோது அவரை ​போலீசார் கைது … Read more

ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றம் அதிகரிப்பு

தெஹ்ரான்: ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றி வருவது அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் உளவுத் துறையுடன் இணைந்து பணியாற்றிய ஈரானைச் சேர்ந்த நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஈரான் நீதித் துறை இணையதள பக்கத்தில், “இஸ்ரேலின் உளவுத் துறையுடன் இணைந்து பணி செய்த நால்வர் மே மாதம் கைது செய்யப்பட்டனர். நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த மூவருக்கு சிறைத் தண்டனை (5 … Read more

மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த புதின்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் (70), மாஸ்கோவில் உள்ள தனது வீட்டு படிக்கட்டில் கடந்த வாரம் இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்தார் என ‘தி டெலிகிராம்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 5 படிக்கட்டுகளை தாண்டி புதின் கீழே விழுந்ததில், அவரது முதுகுதண்டின் அடிப்பகுதி எலும்பு (டெயில் போன்) பாதிப்படைந்ததாகவும், இதன் காரணமாக ஏற்கெனவே குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புதினுக்கு தானாக மலம் வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உடல் நிலை மோசம் … Read more