கிழக்கு காங்கோவில் பரிதாபம்: ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
கின்ஷாசா: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அந்த நாட்டின் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை காலி செய்து விட்டு ஓடி விட்டனர். அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா. அமைதிப்படை உள்ளது. ஆனால் அந்த அமைதிப்படை, தனது கடமையை சரிவரச்செய்வதில்லை, கிளர்ச்சிப்படைகள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. 3 நாட்களாக நடந்த போராட்டத்தில் மட்டும் … Read more