எல்லை பிரச்னையில்4 முக்கிய முடிவுகள்| Dinamalar

பீஜிங்:கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கி கொள்வது தொடர்பாக ராணுவம் மற்றும் தூதரக ரீதியில் பல சுற்று பேச்சு நடந்துள்ளது.
சமீபத்தில், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான, 16வது சுற்று பேச்சு நடந்தது. இதில் அடுத்தகட்ட பேச்சின் வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டதாக, கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் வூ குயான் கூறியுள்ளதாவது: நான்கு முக்கிய விஷயங்களில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் வரையில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, இரு தரப்பு உறவுகளை மீட்டெடுக்கும் முயற்சியை மேற்கொள்வது ஆகியவை இதில் அடங்கும், என்றார்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.