திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சனம்

திருப்புவனம்: ​தி​முக ஆட்சி என்​றாலே அராஜகம்​தான் என்று தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலைக்கு நீதி கேட்டு தேமு​திக சார்​பில் திருப்​புவனத்​தில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பிரேமலதா பேசி​ய​தாவது: அஜித்​கு​மாரை போலீ​ஸார் அடித்தே கொன்​றுள்​ளனர். அவரைக் கொன்​றவர்​களுக்​கும் இது​போன்ற தண்​டனை கொடுக்க வேண்​டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசா​ரிக்​க​வில்​லை. எனவே, இவ்​விவ​காரத்​தில் சிபிஐ உண்​மையை வெளிக்​கொணர வேண்​டும். தமிழகத்​தில் கடந்த ஒரு வாரத்​தில் வரதட்​சணைக் … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு; ஏஜேஎல் நிறுவனத்தை காப்பாற்ற காங். முயற்சி – ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதம்

புதுடெல்லி: ‘‘அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்​தின் (ஏஜேஎல்) சொத்​துகளை விற்க நினைக்​க​வில்​லை. அதை காப்​பாற்​றவே காங்​கிரஸ் கட்சி முயற்​சித்​தது’’ என்று நீதி​மன்​றத்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி​யின் வழக்​கறிஞர் வாதாடி​னார். அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்தை (ஏஜேஎல்) சுதந்​திரத்​துக்கு முன்பு ஜவகர்​லால் நேரு தொடங்​கி​னார். இதில் 5,000-க்​கும் மேற்​பட்ட சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் பங்​கு​தா​ரர்​களாக இருந்​தனர். இதன் சார்​பில் நேஷனல் ஹெரால்டு உள்​ளிட்ட சில பத்​திரி​கைகள் வெளி​யா​யின. நிதி நெருக்​கடி ஏற்​பட்​ட​தால், இந்​நிறு​வனத்​துக்கு காங்​கிரஸ் கட்சி ரூ.90 கோடி … Read more

சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அத்துமீறி செயல்படும் காவல் துறை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

திருப்புவனம்: ​காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​கின்​றனர் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தில் தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரத்​தைச் சேர்ந்த அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை நேற்று சந்​தித்த ஓ.பன்​னீர்​செல்​வம், குடும்​பத்​தினருக்கு ரூ.2 லட்​சம் நிதி​யுதவி அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:காவல் துறையினர் சட்​டப்​படி செயல்ப​டா​மல், கொடூர​மான முறை​யில் தாக்​கிய​தில் அஜித்​கு​மார் உயி​ரிழந்துள்ளார். காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​வது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு … Read more

மணிப்பூரில் பெருமளவு ஆயுதங்கள், வெடிபொருள் பறிமுதல்

இம்பால்: இனக்​கல​வரத்​தால் பாதிக்​கப்​பட்ட மணிப்​பூரில் கடந்த பிப்​ர​வரி​யில் குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டது. மாநிலத்​தில் அமை​தியை மீட்​டெடுக்​கும் முயற்​சிகளில் ஒன்​றாக, இனக் குழுக்​கள் மறைத்து வைத்​துள்ள ஆயுதங்​களை பாது​காப்பு படை​யினர் பறி​முதல் செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மணிப்​பூரில் தெங்​னவ்​பால், காங்​போக்​பி, சண்​டேல், சுராசந்த்​பூர் ஆகிய 4 மலைப்​புற மாவட்​டங்​களின் பல்​வேறு இடங்​களில் போலீ​ஸார் ஒருங்​கிணைந்த சோதனை மேற்​கொண்​டனர். இதில் 200-க்​கும் மேற்​பட்ட துப்​பாக்​கி​கள், 3 கையெறி குண்டு லாஞ்​சர்​களை கைப்​பற்​றினர். மேலும் 30 வெடிகுண்​டு​கள், 10 கையெறி … Read more

வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி: அதிமுக ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கைது

கரூர்: வழக்​கறிஞரிடம் ரூ.96 லட்​சம் மோசடி செய்​த​தாக அதி​முகவைச் சேர்ந்த ஒன்​றியக் குழு முன்​னாள் தலை​வர் நேற்று கைது செய்​யப்​பட்​டார். தூத்​துக்​குடியைச் சேர்ந்த பிரின்​ஸ்​கிப்​ஸன் என்​பவர், கரூர் அரு​கே​யுள்ள கோதூரில் 7 ஏக்​கர் நிலம் வாங்​கு​வதற்​காக, கரூரைச் சேர்ந்த நிலத்​தரகர் ஆர்​.எஸ்​.​ராஜா​விடம் முன்​பண​மாக ரூ.96 லட்​சம் கொடுத்​துள்​ளார். ஆனால், அந்த நிலத்தை வாங்க கால​தாமதம் செய்​த​தால், நில உரிமை​யாளர்​கள் அந்​நிலத்தை வேறு ஒரு​வருக்கு விற்​று​விட்​டனர். இதனால் ரூ.96 லட்​சத்தை பிரின்​ஸ்​கிப்​ஸனிடம், ஆர்​.எஸ்​.​ராஜா திரும்​பக் கொடுத்​துள்​ளார். அதை வாங்க … Read more

ஜெகன் ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: பவன் கல்யாண் உறுதி

பிரகாசம்: ஆந்​திர மாநிலத்​தின் பிர​காசம் மாவட்​டம், நரசிம்​மாபுரத்​தில் குடிநீர் திட்​டத்​துக்கு துணை முதல்​வர் பவன் கல்​யாண் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: 2029-ல் ஆட்​சிக்கு வந்​ததும் எங்​களை ஒரு கை பார்ப்​போம் என முன்​னாள் முதல்​வர் ஜெகன் அடிக்​கடி மிரட்டி வரு​கிறார். சக மனிதர்​களை இவ்​வாறு மிரட்​டிய​தால்​தான் தனக்கு இந்த நிலைமை என்​பதை ஜெகன் இன்​ன​மும் புரிந்து கொள்​ள​வில்​லை. மத்​திய அரசின் ஜல்​ஜீவன் திட்ட நிதியை முந்​தைய ஜெகன் அரசு பயன்​படுத்​த​வில்​லை. மத்​திய அரசுடன் … Read more

பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாது​காப்பு: திருமாவளவன் வரவேற்பு

திருச்சி: விடு​தலை சிறுத்தைகள் கட்சித் தலை​வர் திருமாவளவன் திருச்சியில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கச்​சத்​தீவை மீட்க வேண்​டும் என தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும், இந்​திய அரசு எந்த நிலைப்​பாட்​டை​யும் எடுக்​கவில்லை என்​பது வேதனைக்​குரியது. தமிழகத்​தில் சங்​பரி​வார் அரசி​யல் எந்த வகை​யிலும் நுழை​யாமல் தடுக்க, அனைத்து ஜனநாயக சக்​தி​களும் ஓரணி​யில் திரள வேண்​டும். நடிகர் விஜய்க்கு மத்​திய அரசு ஏற்​கெனவே ஒய் பிரிவு பாது​காப்பு வழங்​கி​யுள்​ளது. தாமத​மாக தற்​போது அதி​முக பொதுச்செய​லா​ளர் பழனி​சாமிக்கு மத்​தியஅரசு இசட் பிளஸ் பாது​காப்பு வழங்கி … Read more

அமர்நாத் யாத்திரையில் பேருந்துகள் மோதல்: 36 பக்தர்கள் காயம்

ஜம்மு: தெற்கு காஷ்மீரில் அமர்​நாத் புனித யாத்​திரை கடந்த 3-ம் தேதி தொடங்​கியது. ஜம்​மு, பகவதி நகரில் இருந்து பஹல்​காம் அடி​வார முகாம் நோக்கி அமர்​நாத் பக்​தர்​களு​டன் நேற்று காலை​யில் பேருந்​துகள் புறப்​பட்​டன. ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்​சாலை​யில் சந்​தர்​கோட் லாங்​கர் பகு​தி​யில் ஒரு பேருந்​தின் பிரேக் திடீரென பழு​தாகி 4 பேருந்​துகள் மீது மோதி​யது. இதில் 36 பக்தர்​கள் காயம் அடைந்​தனர். அவர்​களுக்கு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டு, மாற்று வாக​னங்​களில் யாத்​திரைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்​. … Read more

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ல் தொடங்கி வைக்கிறார்

சென்னை: அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை மக்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமை சிதம்​பரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்​கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விடு​பட்​ட​வர்​கள் இதில் விண்​ணப்​பிக்​கு​மாறு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: மக்​களின் குறை​களை நேரடி​யாக கேட்​டறி​யும் திட்​டம் தொடங்​கப்​படும் என்று சட்​டப்​பேரவை கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார். அதன்​படி, தமிழகத்​தில் உள்ள அனைத்து நகர்ப்​புற, ஊரக … Read more

மருத்துவ கல்லூரி அங்கீகாரம் புதுப்பிக்க கோடிக்கணக்கில் லஞ்சம்: மடாதிபதி உட்பட 35 பேர் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: மத்​திய பிரதேசத்​தின் திகம்​கர் மாவட்​டம், சிப்ரி கிராமத்தை சேர்ந்​தவர் ரவிசங்​கர். ஒன்​பது வயதில் வீட்​டில் இருந்து வெளி​யேறிய அவர், மத்​திய பிரதேசத்​தின் பிண்டு மாவட்​டம், ராவத்​பு​ரா​வில் உள்ள அனு​மன் கோயி​லில் தங்கி ஆன்​மிக பிரச்​சா​ரம் செய்​தார். பின்​னர் ராவத்​புரா கிராமத்​தில் 62 ஏக்​கர் பரப்​பள​வில் பிரம்​மாண்ட சிவன் கோயிலை கட்​டி​னார். தற்​போது அவர் ராவத்​புரா சிவன் கோயி​லின் மடா​திப​தி​யாக உள்​ளார். மேலும் மத்​திய பிரதேசம், சத்​தீஸ்​கர் மாநிலங்​களில் மருத்​து​வம், பொறி​யியல், நர்​சிங், பார்​மசி, ஐடிஐ கல்வி … Read more