‘கை’க்கு மாறியது மயிலாடுதுறை – தொகுதி மக்களுக்கு திமுக எம்.பி. உருக்கமான கடிதம்

கும்பகோணம்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செ.ராமலிங்கம். இந்நிலையில், இந்த முறை திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தற்போதைய எம்.பி. செ.ராமலிங்கம், வாக்காளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘வெற்றிகளால் அடக்கத்தையும், தோல்விகளால் ஊக்கத்தையும் பெறக்கூடியவர்களுக்கு வீழ்ச்சி என்பது எப்போதும் இல்லை’’ என கருணாநிதி கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், ‘‘நான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் தாங்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றி’’ என … Read more

''பாஜகவின் அரசியல் பிரிவாக அமலாக்கத்துறை உள்ளது'' – கவிதா மீதான அறிக்கைக்குப் பின் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ்சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளதாக விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமலாக்கத்துறை பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரிவாக செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அமலாக்கத்துறையை கடுமையாக விமர்சித்துள்ளது. அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அமலாக்கத்துறை அப்பட்டமான பொய் மற்றும் அற்பமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அமலாக்கத்துறை ஒரு நடுநிலையான அமைப்பாக இருப்பதுக்கு … Read more

ஓபிஎஸ், டிடிவி, ராமதாஸ்… – சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

சேலம்: சேலத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ள பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் ஓபிஎஸ், ராமதாஸ், அன்புமணி, தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக சார்பில் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று (மார்ச் 19) பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இதற்காக இன்று மதியம் 12.30 மணிக்கு கேரளாவில் … Read more

மகாராஷ்டிரா | காவல்துறையினருடன் நடந்த மோதலில்  4 நக்ஸலைட்டுகள் உயிரிழப்பு

கட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் செவ்வாய்க்கிழமை போலீஸாருடன் நடந்த மோதலில் 4 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இவர்கள் மீது ரூ.36 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் நீலோத்பால் கூறுகையில், “மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கில் தெலங்கானாவில் இருந்து சில நக்ஸலைட்டுகள் பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்துள்ளதாக திங்கள்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கட்சிரோலியின் … Read more

''தேர்தல் விதிகளை அப்பட்டமாக மீறுகிறார் பிரதமர் மோடி'' – முத்தரசன் கண்டனம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறுகின்ற வகையில், தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தங்கள் கட்சியின் வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒன்றிய அரசின் தவறான கொள்கையினால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் இயங்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. மூடப்பட வேண்டிய நிர்ப்பந்தமான … Read more

37 கோடி வாக்காளர்கள்… இது மோடி வைக்கும் குறி!

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது நாடு முழுவதும் 17.1 கோடி வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது 22 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். அந்த தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காக 37 கோடி வாக்காளர்களின் ஆதரவை திரட்ட பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்திருக்கிறார். … Read more

வடக்கு, மேற்கில் அதிக தொகுதிகளில் திமுக போட்டி: கூட்டணி கட்சிகளுக்கு தெற்கு, மத்திய தொகுதிகள்!

கடந்த முறை மக்களவைத் தேர்தலில், திமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணியில் இருந்த மதிமுக, விசிக, ஐஜேகே, கொமதேக கட்சிகளின் உறுப்பினர்கள் 4 பேர் திமுக சின்னத்தில் நின்றனர். இந்த தேர்தலில், பாஜக கூட்டணிக்கு ஐஜேகே சென்றுவிட்டது. இதையடுத்து, திமுக 21 தொகுதிகளிலும், மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. முன்னதாக, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகவே, மக்களவை தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டது திமுக. இந்த தேர்தலை பொருத்தவரை, அதிமுக, பாஜக இரு கட்சிகளும் … Read more

உ.பி.யில் ராகுல், பிரியங்கா போட்டியா, இல்லையா?

ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் உத்தரபிரதேசத்தில் நேரு-காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். கடைசியாக 2019 தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ரேபரேலியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் இந்தமுறை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். உ.பி.யில் சமாஜ்வாதியுடன் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்துள்ளது. இதில் காங்கிரஸுக்கு அமேதியுடன், ரேபரேலியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ரேபரேலியில் சோனியாவுக்கு பதிலாக பிரியங்கா வதேரா போட்டியிடுவார் எனப் பேசப்பட்டது. ராகுல் மீண்டும் கேரளாவின் வயநாடு தொகுதியில் … Read more

“மோடியின் நல்லாட்சி தொடரவே பாஜகவுடன் பாமக கூட்டணி” – அன்புமணி விளக்கம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் பாஜகவுடன் கூட்டணி முடிவை எடுத்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மார்ச் 19) பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பாமகவுக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய … Read more

டெல்லி திஹார் சிறையில் உள்ள ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் எம்.பி.யாக பதவியேற்க அனுமதி

புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது எம்.பி. பதவி கடந்த ஜனவரி மாதம் முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார். இதையடுத்து, எம்.பி.யாக பதவியேற்க அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.கே.நாக்பால் சஞ்சய் சிங் பதவியேற்றுக் கொள்ள … Read more