திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா உடன் தகராறு: முன்னாள் வேட்பாளர் கட்சிப் பதவி பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா உடன் அக்கட்சியை சேர்ந்த ஜோதிமுத்து தகராறு செய்ததாக கூறி அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இவர் கடந்த முறை மக்களவை தொகுதியில் போட்டியிட்டவர். திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் ஜோதிமுத்து. இவர் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க., வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். தற்பாது இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இம்முறை அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா பாஜக கூட்டணியில் பாமக … Read more

ஏப்.6-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு – 5 நீதிக் கொள்கைகளில் கவனம் 

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 6-ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து வெளியிடப்படும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாசாரா தெரிவித்துள்ளார். இதில், கட்சியின் 5 நீதிக் கொள்கையின் கீழ் 25 வாக்குறுதிகள் மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கான உறுதிமொழிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸின் உயர் மட்ட தலைவர்களும், மாநில … Read more

“ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட்டு இருந்தால்…” – இபிஎஸ் ஆதங்கப் பேச்சு @ சிவகாசி

சிவகாசி: “தமிழக ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட்டிருந்தால் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் வந்திருக்கும்” என சிவகாசியில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆதங்கத்துடன் பேசினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் மாலை நடைபெற்றது. இதில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசுகையில், “விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது … Read more

தலைமை நீதிபதிக்கு 600+ வழக்கறிஞர்கள் கடிதம்: காங்கிரஸை ‘கைகாட்டும்’ பிரதமர் மோடி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “பிறரை அச்சுறுத்துவதும், காயப்படுத்துவதும் பழைய காங்கிரஸின் கலாச்சாரம். தன்னலத்தில் விருப்பமுள்ள குழு ஒன்று நீதித் துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்றத்தை அவமதிக்கவும் முயற்சிக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “பிறரை அச்சுறுத்துவதும், துன்புறுத்துவதும் பழைய காங்கிரஸின் கலாச்சாரம். 5 தசாப்தங்களுக்கு முன்பு அவர்கள் உறுதியான நீதித் … Read more

“தங்கத் தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னத்தில் நிற்பதால் திமுகவினருக்கே குழப்பம்” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: ”தங்கத் தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னத்தில் நிற்பதால் தேனி தொகுதியில் பொதுமக்கள் மட்டுமில்லாது, திமுக தொண்டர்களே குழப்பமாய் இருந்து வருகிறார்கள்” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் உள்ள அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரம், கல்லணை, அலங்காநல்லூர், வலசை, மேட்டுப்பட்டி, பெரியஊர்சேரி, தேவசேரி, சேந்தமங்கலம், வடுகபட்டி, அய்யங்கோட்டை, பாலமேடு, வலையபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சட்டப்பேரவை … Read more

‘‘எங்களின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்க முடியாது’’ – இந்தியா கண்டனம்

புதுடெல்லி: எங்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது என அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அமெரிக்க வெளியுறவுத் துறையின் நேற்றைய கருத்துகள் தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரியை அழைத்து இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் சமீபத்திய கருத்துக்கள் தேவையற்றவை. நமது தேர்தல் மற்றும் சட்ட செயல்முறைகள் மீதான இத்தகைய வெளிப்புற குற்றச்சாட்டுகள் … Read more

குத்தகை வீடுகளை அடமானம் வைத்து மோசடி: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு – முழு விவரம்

சென்னை: குத்தகைக்கு எடுக்கும் வீடுகளை முறைகேடாக அடமானம் வைத்து மோசடி செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது வீட்டை குத்தகைக்கு எடுத்த ராமலிங்கம், தனக்கு தெரியாமல் அந்த வீட்டை அடமானம் வைத்து மோசடி செய்ததாக சென்னை முகப்பேரைச் சேர்ந்த கனகராஜ் எனபவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமலிங்கத்துக்கு கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஜாமீனை … Read more

தேசப் பாதுகாப்பை பலவீனமாக்கும் ‘அக்னி வீரர்’ திட்டத்தை காங். நிறுத்தும்: கார்கே வாக்குறுதி

புதுடெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அக்னி வீரர் திட்டத்தில் மேம்பாடுகளையும் மாற்றங்களையும் செய்ய தயாராக இருப்பதாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறி இருக்கிறார். கோடிக்கணக்கான தேசபக்தியுள்ள இளைஞர்கள் மீது மோடி அரசால் திணிக்கப்பட்ட அக்னிவீர் திட்டம் இனி வேலை செய்யாது என்பதையே இது காட்டுகிறது. முதலில் லட்சக்கணக்கான இளைஞர்களின் … Read more

மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு மீது இன்று (மார்ச் 28) தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி … Read more

“இறுதி மூச்சு வரை என் தொகுதி மக்களுடன் உறவு…” – பாஜகவில் சீட் கிட்டாத வருண் காந்தி உருக்கம்

புதுடெல்லி: “இறுதி மூச்சு வரை பில்பித் தொகுதி மக்களோடு இருப்பேன்” என்று அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், வருண் காந்தி மிகவும் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பில்பித் தொகுதியின் எம்பியாக இருப்பவர் வருண் காந்தி. 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவர் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். 1996-ல் இருந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தொகுதியின் எம்பியாக வருண் காந்தி அல்லது அவரது தாயார் மேனாகா காந்தி இருந்துள்ளனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் … Read more