பாடலாசிரியர் உரிமை குறித்து இளையராஜாவிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை ஒவ்வொரு பாடலாசிரியரும் பாடலுக்கு உரிமை கோரினால் என்னாகும் என இளையராஜவிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ளதுடன் தற்போதும் பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இளையராஜாவின் பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக காப்புரிமை கேட்டு, இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது … Read more

பிரதமர் மோடிக்கு வாக்காளர்களைக் கண்டு பயம் : கார்கே

திருவனந்தபுரம் பிரதமர் மோடி கண்ணுக்கு தேரியாத வாக்காளர்களைக் கண்டு பயப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார், நாளை மறுநாள் அதாவது 26 ஆம் தேதி அன்று கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இங்கு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. கேரளாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளரிடம்ம் ”பிரதமர் மோடி கிட்டத்தட்ட 10-12 மாநிலங்களுக்குப் பயணம் செய்ததாகவும், அங்குள்ள … Read more

மக்களைத் திசை திருப்பும் மோடி : பிரியங்கா காந்தி

வயநாடு  பிரதமர் மோடி மக்களைத் திசை திருப்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். வரும் 26 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது. அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பிரியங்கா காந்தி, “மக்களுக்காகப் … Read more

பிரதமர் மோடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைக் களங்கப்படுத்துகிறார் : ப சிதம்பரம்

சிம்லா பிரதமர் மோடி காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைக் களங்கப்படுத்துவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ராஜஸ்தானில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது 0காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தாக்கியும், இஸ்லாமியர்கள் குறித்து தெரிவித்த கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. காங்கிரஸ், இந்தியா கூட்டணிக் கட்சிகள் பரவலாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சிம்லாவில் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், … Read more

பிரசாரக் கூட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி

யவத்மால்  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் மகாராஷ்டிராவில், 5 கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19 ஆம் தேதி முதற்கட்டமாக, 5 தொகுதிகளுக்குத் … Read more

பிரதமரின் பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது  – சாம் பபித்ரோடாவின் கருத்துக்கள்  இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல! ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: பிரதர் மோடிடயின்  பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது,  இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர்  சாம் பித்ரோடாவின் கருத்துக்கள்  இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 2வது கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்துடன் சர்ச்சைகளும் தொடர்ந்து வருகின்றன. மோடியின் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்துக்கு  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று … Read more

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு! தொல்லியல் துறை குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும்,  வள்ளலார் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை கோவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய ஞானசபை பகுதி பெருவெளியில் ரூ.100 கோடி மதிப்பில் சர்வதேச … Read more

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது வாழ்க்கையின் நோக்கம், இதற்கு நான் கியாரண்டி! ராகுல்காந்தி…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, “ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது வாழ்க்கையின் நோக்கம், இதற்கு நான் கியாரண்டி என பொதுமக்களிடம் உறுதி அளித்தார். நாடாளுமன்ற தேர்தலின் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.  இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி, இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் பகல்பூர் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி,  , “ஜாதிவாரி … Read more

26ந்தேதி வாக்குப்பதிவு: இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும் 13மாநிலங்களின் 89 தொகுதிகளில், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு…

டெல்லி: மக்களவைக்கான 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 26ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளில் இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதில், ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள்  போட்டியிடும் தொகுதிகள் உள்பட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில், இன்று மாலையுடன்  பிரசாரம்  ஓய்கிறது. 18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் … Read more

விவிபேட் (VVPat Machine) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்…

டெல்லி: இயந்திர வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும் விவிபேட் (VVPat Machine) ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக்கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.  உச்சநீதிமன்றம்  இன்று என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்பது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 18வது மக்களவை அமைப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல்கட்ட தேர்தல்,   ஏப்ரல் 19 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அடுத்த 6 கட்ட தேர்தல்கள்  ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற … Read more