இன்று நடக்க இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது

சென்னை தி.நகரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

“நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை அரசுக்கு ஆளுநர் தனியே அனுப்பியிருக்கிறார்; இதை இதுவரை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. நீட் விவகாரத்தில் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அதிமுக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

 நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு பாதிக்கப்படவில்லை. எதன் அடிப்படையில் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என சொல்லப்படுகிறது? மருத்துவ படிப்பில் தமிழ்நாட்டிற்கான சீட்டை ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது.

ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதால் திமுக உருவாக்கிய நீட் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்றார்.

மசோதாவை திருப்பிய ஆளுநரின் விளக்கத்தை வெள்ளை அறிக்கையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். நீட் தொடர்பான இன்றைய  அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது எனவும்  ராகுல்காந்தி என்ன சொன்னாலும் அதற்கு எதிர்மறையாக நடக்கும். தமிழ்நாட்டில் பாஜக நிச்சயம் ஆட்சிக்கு வரும்.” என்றார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.