இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து இராஜாங்க அமைச்சரின் தகவல்



இலங்கையில் முடக்கத்தை அல்லது பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தகவல் வெளியிட்டுள்ளார். 

நாட்டில் தற்போது கோவிட் தொற்று நிலைமையானது அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டும் வரும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து பதில் வழங்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவிக்கையில், 

தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இருப்பினும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதோடு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டால் கோவிட் தொற்று சவாலை சமாளிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.