பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை இன்று முதல் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் பிரச்சாரம் செய்கிறார்.

இதுதொடர்பாக பாஜக உள்ளாட்சி தேர்தல் மாநில குழு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிப்.6 (இன்று) முதல் 9-ம் தேதி வரை முதல்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதன்படி, 6-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் பிரச்சாரத்தில் பங்கேற்கிறார். 7-ம் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் பிரச்சாரம் செய்கிறார். 8-ம் தேதி நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலியிலும், 9-ம் தேதி கோவில்பட்டி, சிவகாசி விருதுநகர், மதுரையிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.