சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிருந்து பெற விரும்பவில்லை – அமைச்சர் நிதின் கட்காரி <!– சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிர… –>

சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிருந்து பெற விரும்பவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர்,  உள்நாட்டில் சிறிய முதலீட்டாளர்கள் ஒரு  லட்சம் ரூபாயினை ஆண்டுக்கு 8 சதவீத வட்டியில் வழங்க தயாராக உள்ளனர் என்றார். எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தவிர்த்து நமது சிறிய முதலீட்டாளர்களிடமிருந்தே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு தேவையான நிதி திரட்டிக் கொள்ளப்படும் என்று கூறினார்.

பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க தாம் விரும்பவில்லை என்று கூறிய கட்கரி, அதற்கு மாறாக, நமது நாட்டின் விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள் பயன்பெறும் வகையில் உள்நாட்டிலேயே தேவையான நிதி திரட்டப்படும் என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.