மேகதாது அணை விவகாரம் – கர்நாடகாவிற்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி:
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
இந்த அணை கட்டப்பட்டால் தமிழக டெல்டா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு மேகதாது அணைத் திட்டத்திற்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் கர்நாடக மாநில எம்.பி  மேகாதாது அணைக்கு அனுமதி எப்போது என வழங்கப்படும் என்று  என எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பினார். 
இக்கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற  இணை மந்திரி அஸ்வினி குமார்,  மத்திய நீர் வள அமைச்சகமும், காவிரி மேலாண்மை ஆணையமும் அணை தொடர்பான திட்ட அறிக்கையை ஏற்ற பிறகே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். 
மேகதாது அணை  கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமூக  முடிவு எட்டப்பட்டால்  மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 
மத்திய அரசுக்கு கிடைக்கப் பெற்ற அறிக்கையின் அடிப்படையில் மேகதாது அணை கட்டப்பட்டால் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும். சங்கமா, மடவாளா, பொம்மை சந்திரா உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கும் என மத்திய இணை மந்திரி அஸிவினி குமார் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.