இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை <!– இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 29 ஆய… –>

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பட்டப்பகலில், நகையை அடகு வைத்து கொண்டு சென்ற ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருமண விழாக்களில் மைக் செட் அமைக்கும் வேலை பார்த்து வரும் ஜெய் கணேஷ் என்பவர், நேற்று மாலை காமராஜ் நகரில் உள்ள வங்கியில் நகையை அடகுவைத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அதில் ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை பைக்கின் முன்சீட்டின் வைத்திருக்கிறார். இதை நோட்டமிட்ட ஹெல்மெட் அணிந்திருந்த மர்ம நபர், பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த நிலையில், ஜெய் கணேஷ் பெட்ரோல் பங்க் அருகேயுள்ள ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற நேரம் பார்த்து பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இது குறித்து ஜெய கணேஷ் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.