கோவை : கால்டாக்சி ஓட்டுநர் கொடூர கொலை.. காவல்துறை தீவிர விசாரணை..!

சவாரிக்கு சென்ற ஓட்டுநர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று காயங்களுடன் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் பாப்பநாயக்கன் பகுதியை சேர்ந்த சனு என்பது தெரியவந்தது.

மேலும், அவர் கால்டாக்சி நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை தனியார் விடுதியில் இருந்து சவாரி அழைப்பு வந்ததாகவும் அதன் பின் அவர் ஜிபிஎஸ் இணைப்பு துண்டிக்கப்பட்ட தாகவும் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

அடுத்து சனுவை கொடூரமாக கொலை செய்தது யார்?  கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால் டாக்ஸி ஓட்டுனர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.