உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, தெப்போற்சவ விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. இதையெட்டி தேவி, பூதேவியுடன், சுந்தரவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவி, பூதேவியுடன் உற்சவர் சுந்தரவரதராஜப் பெருமாள் எழுந்தருளி குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/02/1644524483_Tamil_News_2_11_2022_68850345.jpg)