Thalaivar 169: நெல்சா.. அழுகைய அடக்க முடியலடா: எமோஷனலான பிரபலம்..!

சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் சிவா இயக்கத்தில்
ரஜினிகாந்த்
நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.

பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ரஜினி, தங்க செயின் பரிசாக அளித்தார். அத்துடன் சிவாவுடன் 3 மணிநேரம் கலந்துரையாடிவிட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் – தனுஷும் பிரிவதாக அறிவித்ததில் இருந்து ரஜினி தனிமையில் இருப்பதாகவும், சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வசனமாடா முக்கியம்.. படத்தை பாருடா: சிம்புவை வம்பில் மாட்டிவிடும் வெங்கட் பிரபு.!

அதனை தொடர்ந்து நேற்றைய தினம் ரஜினியின் ‘தலைவர் 169’ பட அப்டேட் மாஸாக வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை
நெல்சன் திலீப்குமார்
இயக்குகிறார். அனிருத் இசையமைக்கவுள்ளார். டார்க் காமெடியில் கலக்கும் நெல்சன், ரஜினியுடன் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

‘தலைவர் 169’ அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து நடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘என்னால அழுகைய அடக்கவே முடியலடா நெல்சா… தலைவர் சிங்கம் மாதிரி இருக்காரு. அனிருத்தின் பிஜிஎம் வெறித்தனமாக இருக்கு’, ‘போங்கப்பா ரொம்ப ஹாப்பி’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.