அடுக்குமாடி இடிந்து இருவர் உயிரிழப்பு| Dinamalar

குருகிராம்: ஹரியானா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குருகிராம் பகுதியில், செக்டார் 109ல் ‘சின்டெல்ஸ் பாரடைசோ’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் ஆறாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் புதுப்பிக்கும் பணி நேற்று முன் தினம் நடந்தது. அப்போது அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதை தொடர்ந்து தரைத் தளம் வரை அனைத்து வீடுகளிலும் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இந்த விபத்தில் இதுவரை இரண்டு பேர் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் இடிபாட்டுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.