தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை:
   
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 3,086 ஆக பதிவாகி இருந்தது.
 
இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 2,812 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 33 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 05 ஆயிரத்து 822 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 11 ஆயிரத்து 154 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மேலும் 546 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,904 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.