முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கு.க.செல்வம். தி.மு.க.வை சேர்ந்த இவர் 2020, ஆகஸ்டு 4-ம் தேதி டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினார்.
தகவலறிந்த தி.மு.க. அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இருந்தாலும் சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கு.க.செல்வம் தியாகராயநகரில் உள்ள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயம் வந்து பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், தி.மு.க.வில் இருந்து விலகிய கு.க.செல்வம் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.