ராஜஸ்தான், டெல்லியுடன் மல்லுக்கட்டி தீபக் சாஹரை 14 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே

பெங்களூர்:
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 2021-ம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக தீபக் சாஹர் விளையாடி வந்தார். 80 லட்சத்துக்கு எடுக்கப்பட்டிருந்த சாஹருக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.
ராஜஸ்தான், டெல்லி, சென்னை, ஆகிய அணிகள் மல்லுக்கட்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 14 கோடிக்கு எடுத்தது. இஷான் கிஷானுக்கு அடுத்தபடியாக தீபக் சாஹர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.