போராட்டக்காரர்களை கலைக்க பலத்த சப்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்த போலீசார்-நடனமாடி போலீசாரை வெறுப்பேற்றிய போராட்டக்காரர்கள் <!– போராட்டக்காரர்களை கலைக்க பலத்த சப்தத்துடன் பாடல்களை ஒலிக்… –>

நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் அதீத சப்தத்துடன் பாடல்களை ஒலிக்க விட்ட நிலையில், சற்றும் பின்வாங்காத போராட்டக்காரர்கள், பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி போலீசாருக்கு வெறுப்பேற்றினர்.

தடுப்பூசி எதிர்ப்பாளர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றம் செல்லும் சாலைகளின் குறுக்கே கனரக வாகனங்களை நிறுத்தியும், கூடாரங்களை அமைத்தும் 6 நாட்களாக மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கனமழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த போலீசார் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்தனர். அதற்கும் அசராத ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆடி பாடி உற்சாகமடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.