சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியில்லை?| Dinamalar

மைசூரு, : ”சாமுண்டேஸ்வரி தொகுதியில், முன்னாள் முதல்வர் குமாரசாமி வேட்பாளராக மாட்டார். அவர் ராம்நகரை விட்டு வர மாட்டார்,” என மைசூரின் கே.ஆர்., நகர் ம.ஜ.த., – எம்.எல்.ஏ., சா.ரா.மகேஷ் தெரிவித்தார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:குமாரசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னரே, நான் இதை கூறுகிறேன். சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிடும்படி, தலைவர்கள், தொண்டர்கள் நெருக்கடி கொடுப்பது உண்மை தான். ஆனால் இத்தொகுதியில், குமாரசாமி வேட்பாளராக மாட்டார் என்பதும், அதே அளவு உண்மை. சாமுண்டேஸ்வரி தொகுதியில், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,வே இருக்கிறார். எனவே, குமாரசாமி இங்கு வர வேண்டிய அவசியமில்லை.

ராம்நகரை விட்டு அவர் வர மாட்டார்.ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழுவில், எனக்கு எந்த பொறுப்பும் தேவையில்லை என, நானே கைகூப்பி கேட்டு கொண்டேன். நான் யாரை கட்சிக்கு அழைத்து வந்தேனோ, அவர்களே என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். எனக்கு கட்சியில் பதவி கிடைத்தால், அவர்களால் சகிக்க முடியாது. எனவே நான் உங்களுடனேயே இருக்கிறேன். பதவி வேண்டாம் என்றேன். எனவே என்னை ஒருங்கிணைப்பு குழுவில் சேர்க்கவில்லை.மைசூரு மாநகராட்சியில், இம்முறை ம.ஜ.த., சேர்ந்தவரே மேயராவார். நாங்கள் மேயர் பதவிக்கு போட்டியிடுவோம். ம.ஜ.த., சேர்ந்தவரே மேயராவார் என்பது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.