நாளை நடக்க இருந்த திருப்புதல் தேர்வின் வினாத்தாள் லீக்.! காவல்நிலையத்தில் புகார்.!

தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. 

10-ம் வகுப்புக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு கடந்த 9-ந்தேதி துவங்கி 17 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28-ந்தேதி துவங்கி ஏப்ரல் 4 வரையும் நடத்தப்படுகிறது. 

12-ம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த 9-ந்தேதி தொடங்கி 17 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதியும் முடிகிறது. 

இந்நிலையில்,  நாளை நடைபெற தொடங்க இருந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் உள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது குறித்து செய்யார் காவல்துறையினரிடம் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.