அரசு டிப்போவில் சார்ஜ் செய்த போது திடீரெனெ தீப்பற்றி எரிந்த மின்சார பேருந்து.. தெலுங்கானாவில் பரபரப்பு..! <!– அரசு டிப்போவில் சார்ஜ் செய்த போது திடீரெனெ தீப்பற்றி எரிந… –>

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அரசு டிப்போவில் சார்ஜிங் செய்யப்பட்ட மின்சார பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

செகந்திராபாத் டிப்போவில் மின்சார பேருந்துகளை சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை இரண்டு பேருந்துகள் சார்ஜிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியாக அருகில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த மற்றொரு பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதற்குள்ளாகவே அந்தப் பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.