தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரை இல்லாமல் இன்று ஆரம்பம் <!– தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரை இல்லாமல் இன்று… –>

தெலுங்கானாவில் ஆளுநர் உரை இல்லாமல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது.

முதல் நாளான இன்று நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் வழக்கமாக இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஆளுனர் உரை நிகழ்த்துவது வழக்கம்.

ஆனால் இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரை இல்லாமல் தொடங்குகிறது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை என்பதாலும் ஏற்கனவே நடந்த தொடரின் தொடர்ச்சி என்பதாலும் ஆளுனரின் உரை தேவையில்லை என்றும் தெலுங்கானா அரசு விளக்கம் அளித்திருந்தது நினைவு கூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.