போலீஸ் ஸ்டேஷன்களில் குவியும் கோவில் ஊழியர்கள்

நெல்லிக்குப்பம் : கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் மீது எந்த வழக்கும் இல்லை என போலீசில் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, அவர்கள் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பல ஆயிரம் கோவில்கள் உள்ளன. இங்கு அலுவலர்கள், பணியாளர்கள், குருக்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் என ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் கடிதம் வந்துள்ளது.

அதில், கோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமின்றி குருக்கள், பட்டாச்சாரியார்கள் மீது எந்த வழக்கும் இல்லை என தங்கள் ஊர் போலீஸ் நிலையங்களில் சான்றிதழ் பெற்று அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, கோவில் பணியாளர்கள் மற்றும் குருக்கள் உட்பட அனைவரும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு படையெடுத்து சான்றிதழ் பெறும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.