பூந்தமல்லி அருகே மண்கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான கோவில் குளத்தை மீட்ட அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே மண்கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் குளத்தை அதிகாரிகள் மீட்டனர்.

அகரம்மேல் ஊராட்சியில் 40 சென்ட் நிலத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த மூக்குத்திக் குளம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மண் கொட்டி மூடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி மூடப்பட்ட குளத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாவட்ட கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில்  2 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மூடப்பட்ட குளம் தோண்டப்பட்டு வருகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.