ஹெலிகாப்டர் விபத்து- காயமடைந்த துணை விமானி மேற்சிகிச்சைக்காக உதம்பூர் மருத்துவமனைக்கு மாற்றம்

வடக்கு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் குரேஷ் செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் பயணித்த விமானி சங்கல்ப் யாதவ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு விமானியான விவேக் குமார் திவேதி பலத்த காயங்களுடன் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில்,விமானி விவேக் குமார் திவேதி மேற்சிகிச்சைக்காக உதம்பூரில் உள்ள ராணுவ கட்டளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்.. பஞ்சாப் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பகவந்த் மான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.