பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கி இன்றுடன் 18 நாள் ஆகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளதாக கூறப்பட்டது. மேலும் படைவீரர்களும் பலியாகினர்.
ரஷியாவின் தாக்குதலை அடுத்து உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்தியது. இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் அடிக்கடி நடைபெற்றது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் , வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். 
இதில் உக்ரைன் போர் சூழலால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார் என தகவல்கள் வெளியானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.