தேர்வு சரியாக எழுதாததால் மாணவி எடுத்த விபரீத முடிவு..!

சரியாக தேர்வு எழுதாததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு மாதவி என்ற மனைவியும் மகாலட்சுமி  என்ற மகளும் உள்ளனர். அவரது மகள் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.  நடனத்தின் மீதான ஆர்வத்தால் சரியாக படிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அவர் சரியாக தேர்வெழுதவில்லை என கூறப்படுகிறது. கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த அவர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். மாலையில், அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின்  உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணாய் மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.