கொரோனா காலத்தில் மனநல கோளாறுகள் 35 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி:

இந்தியாவைப்பற்றி ஒரு ஆய்வு இத்தகைய தகவலை வெளியிட்டதா என்று பா.ஜ.க. எம்.பி. ரூபா கங்குலி கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறப்பட்டிருந்த தகவல்கள்:-

* கொரோனா காலத்தில் 2020-ம் ஆண்டில் 204 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மனச்சோர்வு, கவலை உள்ளிட்ட கோளாறுகளின் உலகளாவிய பரவல் மற்றும் சுமை பற்றி ‘லான்செட்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

* இதில் தேசிய மனநல திட்டம், 704 மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவு, தேசிய சுகாதார இயக்கம் மூலம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படுகிறது.

* மாவட்ட மனநல திட்டத்தின்கீழ் சமூக சுகாதார மையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் கிடைக்கின்றன.

* புறநோயாளி சேவை, மதிப்பீடு, ஆலோசனை அல்லது உளவியல் சமூக தலையீடுகள், கடுமையான மனநல கோளாறுகள் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான பராமரிப்பு, மருந்துகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

* குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என பல்வேறு இலக்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல நிபுணர்களின் சேவைகளை வழங்க 24 மணி நேரமும் செயல்படுகிற ஹெல்ப் லைன் அமைக்க மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.