சாலையோரம் புளி வியாபாரம் செய்த மூதாட்டியிடம் 10,000 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பித்த மூன்று புள்ளிங்கோக்கள்-சிசிடிவி காட்சிகள்

வாணியம்பாடியில் சாலையோரம் புளி வியாபாரம் செய்த மூதாட்டியிடம் பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பித்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர். 

கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் வசந்தா என்ற அந்த மூதாட்டி பஜார் வீதியில் 2 நாட்களாகப் புளி மற்றும் முட்டைகளை விற்று ஈட்டிய 10,000 ரூபாயையும், உறவினர் ஒருவரின் வெள்ளி கொலுசையும் சுருக்குப்பையில் வைத்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், வாடிக்கையாளர் போல் நாடகமாடி மூதாட்டியின் சுருக்குப்பையை பறித்து கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தயாராக காத்திருந்த கூட்டாளிகளுடன் தப்பி சென்றார்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.