தற்காப்பு கலை பயிற்சி மாணவியருக்கு அவசியம்| Dinamalar

சிக்கமகளூரு : ”மாணவியருக்கு தற்காப்பு கலை அவசியம்,” என அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது:கர்நாடகா முழுவதும் 1,400 பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் மாணவியர் தற்காப்பு பயிற்சி பெற்று தைரியமாக தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி மிகவும் முக்கியமானது. மகாத்மா காந்தி கண்ட கனவை நினைவாக்க மாணவ-மாணவியர் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.