தேர்தலில் வெற்றிப் பெற்ற ஹங்கேரி பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஹங்கேரியில் நேற்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையாத நிலையில் பெரும்பாண்மையுடன் ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பனின் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. இதனால், 4வது முறையாக விக்டர் ஆர்பன் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் ஹங்கேரியின் வெற்றிக்காக விக்டர் ஆர்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் விக்டர் ஆர்பன், ஹங்கேரியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இந்தியா- ஹங்கேரி இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. இலவச திட்டங்களால் இலங்கை போல் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – பிரதமரிடம் அதிகாரிகள் கவலை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.