ஸ்ரீநகரில் படகு வீடுகள் எரிந்து சேதம்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் புகழ்பெற்ற நைஜீன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏராளமான படகு வீடுகள் உள்ளன. இன்று அதிகாலை ஒரு படகு வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுபக்கத்தில் நிறுத்தபட்டு இருந்த படகு வீடுகளுக்கும் தீ பரவியது. இது பற்றி அறிந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ஆனாலும் 7 படகு வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.