தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும்- செல்லூர் ராஜூ உறுதி

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும். விரைவில் தமிழகம் ராம ராஜ்ஜியமாக மாறும். சொத்துவரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துவிட்டது.
அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த 11 மாத காலமாக மோசமான சூழ்நிலை  நிலவி வருகிறது.

அதிமுக தொடர்ந்து பத்தாண்டு காலம் ஆட்சியை நடத்தியது. அதுதான் ராம ராஜ்ஜியம். அப்போது அனைத்து மக்களும் சுபிட்சமாக இருந்து நலமாக வாழ்ந்தார்கள். தற்போது திமுக ஆட்சியால் தமிழகம் கலியுகமாக மாறிவிட்டது. தமிழகம் விரைவில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக ராமராஜ்ஜியத்தை வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
அண்டை நாடுகள் விவகாரம் – பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.