பொருளாதார நெருக்கடிச் சூழலில் இலங்கைக்கு உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி – கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா

பொருளாதார நெருக்கடிச் சூழலில் இலங்கைக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் இந்தியாவுக்கு கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியா நன்றி தெரிவித்துள்ளார்.

எரிவாயு, மின்சாரம் இல்லாததால் மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணாவிட்டால் இது பேரழிவாக மாறிவிடும் என்றும், இதற்குத் தீர்வுகாணும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியுடன் நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழும் என ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.